தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், கூட்டணி ஆதரவை நாடியது. இந்தச் சூழலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்.எல்.ஏ. எஸ். காமராஜ் சார்பில் ஆதரவுக் கடிதம் ஒன்றை தவெக தரப்பு ஆளுநரிடம் சமர்ப்பித்தது. இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்தக் கடிதத்தை மோசடியானது என்றும், தங்கள் எம்.எல்.ஏ.வை குதிரை பேரம் மூலம் ஈர்க்க முயற்சி நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தமிழக அரசியலை பரபரப்பாக்கியது.
தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பித்தார். இதில் அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ.வின் ஆதரவு உட்பட பல கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தார். ஆனால், அமமுக தரப்பு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. தினகரன் தன் எம்.எல்.ஏ. காமராஜை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரது போன் அணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

“இது தெளிவான குதிரை பேரம். தவெக தரப்பு மோசடி செய்து கடிதம் தயாரித்துள்ளது” என்று ஆளுநரிடம் புகார் அளித்தார். இதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். விஜய் குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் வைகோ மறுத்து விட்டார்.
இதையும் படிங்க: வைகோவிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..! பட்டுத்துண்டு அணிவித்து வரவேற்ற எம்பி துரை வைகோ..!
குதிரை பேரம் குறித்து ஒவ்வொரு தலைவருக்கு ஒரு கருத்து இருக்கும் குதிரை பேரும் நடைபெறவில்லை என தான் கருதுகிறேன். ஜோதிடருக்கு தமிழக அரசியல் வழங்கப்பட்ட பொறுப்பு திரும்ப பெறப்பட்டது வரவேற்கத்தக்கது. விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. அதிமுகவில் ஒரு பிரிவு ஆதரவு கொடுப்பதை விஜய் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறார். போதுமான ஆதரவு அவருக்கு ஏற்கனவே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!