தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.

இதனிடையே, வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து விளைவிக்கும் என்று கூறினார். தமிழ்நாட்டின் நலன் உரிமைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: SIR பணிகளை நிறுத்தி வைக்க கோரி தீர்மானம்... அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவு…!
ஜனநாயகத்தின் ஆணி வேரையும் அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்காக தமிழகத்தில் வந்து தங்கி உள்ளனர் எனவும் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர் காரணமாக வட மாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் அபாயகரமான நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: NRC தான் அவங்க குறிக்கோள்... SIR குடியுரிமை மீதான தாக்குதல்... உடைத்து பேசிய திருமா