உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை'த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் விரும்பினால் அவற்றைத் தனியார்ப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள இந்த சட்டத் திருத்தம் வழி வகுக்கிறது.
தனியார் பல்கலைக்கழகம் துவக்குவதற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. அதை தளர்த்தி மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர் இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று இந்த திருத்தச் சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் விரும்பினால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற அனுமதியும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதன் மூலம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே தனியார் கல்லூரிகளோ அரசு உதவி பெறும் கல்லூரிகளோ தம்மைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

புதிதாக உருவாகும் தனியார் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களிலிருந்து, மாணவர் படிப்புக் கட்டணம், ஆசிரியர் ஊதியம் எல்லாவற்றையும் தமது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கதுதான்., ஆனால் அது இன்னொரு விதத்தில் கல்வி தனியார் மயமாவதற்கும் வழி வகுத்துள்ளது என்று கூறியது.
இதையும் படிங்க: SIR ஒரு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த விசிக வலியுறுத்தல்...!
உயர்கல்வி தனியார் மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும் என்றும் கல்விக் கட்டணம் அதிகரிக்கும்., அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேரப் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பிரம்மாண்ட படைப்பு "பெரியார் உலகம்"... ரூ.10 லட்சம் நிதி வழங்கிய திருமாவளவன்...!