தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஸ்டாலினை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். வாசலில் காத்திருந்து முதல்வர் விஜய்க்கு பட்டுத்துண்டு, மாலை அணிவித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்கள் முதலமைச்சரைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக ஒரு பணிப்பெண், தன் மகிழ்ச்சியை அடக்க முடியாமல், பாரம்பரிய தமிழ் வழக்கப்படி முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்தார். இது அவரது உண்மையான பாசத்தையும், விஜய் மீதான அபிமானத்தையும் காட்டிய ஒரு தருணம்.
இதையும் படிங்க: அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!
இந்த எதிர்பாராத, இதயத்தைத் தொடும் செயலுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக பதிலளித்தார். அவர் சிரித்தபடியே, அந்தப் பணிப்பெண்ணுக்கு திருப்பி திருஷ்டி கழித்தார். இந்த பரஸ்பர செயல், அருகில் நின்ற வைகோ உள்ளிட்ட அனைவரையும் புன்னகையில் ஆழ்த்தியது. வைகோ அவர்கள் இந்தக் காட்சியை மகிழ்ச்சியுடன் பார்த்து, தன் வீட்டு ஊழியர்களை முதலமைச்சருடன் அறிமுகப்படுத்தி, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். அவர்களை அறிமுகப்படுத்தும் பொழுது இவர்கள் எல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவர்கள் தான் என்று எம்பி துரை வைகோ அறிமுகம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!