மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்.

விஜயின் இந்த முன்னெடுப்புக்கு மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எப்படியாவது விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூட மாணவ மாணவிகள் நன்றாக படித்து அதிகம் மதிப்பெண் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2025 கல்வி ஆண்டுக்கான பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார். நரகத்திற்கு விஜய் வந்தவுடன் மாணவ மாணவிகள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: உற்சாகமாக தொடங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..! த.வெ.க தலைவர் விஜய் வருகை..!

தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுடன் விஜய் உரையாடியதுடன் அவர்களுடன் அமர்ந்தார். இதனை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: உதவ சென்ற பெண்களை பூட்ஸ் காலால் உதைப்பதா? இதைதான் ஸ்டாலின் சொல்லிக் கொடுத்தாரா? - விஜய் ஆவேசம்