அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தின் இணைந்துள்ளார். அவருக்கு பொறுப்பு வழங்கி தமிழக கட்சி கழக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர் செங்கோட்டையன் என்றும் தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் எனவும் தெரிவித்தார். அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர் மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என்று கூறினார். இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்தார். இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க தனக்கு செங்கோட்டையன் உறுதுணையாகச் செயல்படுவார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: MGR, அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன்... தவெக தொண்டர்கள் புடைசூழல் மரியாதை...!
மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார் என்றும் என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று விஜய் தெரிவித்தார்
இதையும் படிங்க: “சேகர் பாபுவை சந்திக்கவில்லை... பாஜகவை கண்டு கொள்ளவில்லை” - படு ஓபனாக பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!