தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி காணாமல் போனார். இது குறித்து அவது பெற்றோரும் கிராமத்தில் தேடி பார்த்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் அங்க உள்ள காட்டு பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து குற்றவாளி கைது செய்வதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த வகையில் வந்து அபகுதியில் உள்ள காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலமாக குற்றவாளி யார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல அந்த மாணவியின் உடற்கூராய்வு மற்றும் சிசிடிவியில் பதிவான வாகன திருட்டு விவகாரம் அனைத்தும் இந்த குற்றச்சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் தான் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்திற்கு கையெழுத்து போடுவதற்காக வந்த தர்ம முனீஸ்வரனை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை போலீசார் நேற்றுமுதல் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, எட்டயபுரம் அருகிலுள்ள கீழரால் பகுதியில் ஒரு மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, அவரது நகைகளை பறித்து தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2022 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், கடந்த டிசம்பர் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... தூத்துக்குடி மாணவி வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி...!
சிறையிலிருந்து வெளியே வந்ததையடுத்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்துள்ளார். காலை நேரத்தில் கையெழுத்து பதிவு செய்த பின்னர், அவர் தனது செயல்களில் ஈடுபட்டுள்ளார். பணம் இல்லாததால் மீண்டும் திருட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் முதலில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடியுள்ளார். அந்த பைக்கை பயன்படுத்தி பல பகுதிகளில் சுற்றி, திருட ஏற்ற இடங்களை முன்கூட்டியே கண்காணித்துள்ளார். பெண்களை குறிவைத்து தாக்கி, அவர்களிடமிருந்து நகைகளை பறிப்பது இவரின் வழக்கமான குற்ற முறையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கொளத்தூர் குறுக்குச்சாலை மற்றும் கிழக்கு கடைச்சாலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கண்காணிப்பு மேற்கொண்டுள்ளார். பின்னர், வேடநத்தம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை தேர்வு செய்துள்ளார். அந்த இடத்திற்கு பெண்கள் இயற்கை உபாதைக்காக அடிக்கடி வருவதால், குற்றத்தை எளிதில் செய்து விட்டு தப்பிக்கலாம் என்று எண்ணியுள்ளார். சம்பவம் நடந்த நாள் மதியம் சுமார் 3.30 மணியளவில், அந்த காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளார். அப்போது சில பெண்கள் குழுவாக வந்ததால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் ஒரு பெண்மணி சென்றபோதும் வாய்ப்பு அமையவில்லை.
அதன் பின்னர், ஒரு பள்ளி மாணவி தனியாக இயற்கை உபாதையைக் கழிக்க வந்தபோது, பின்னால் இருந்து ஒரு கம்பியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், அந்த மாணவி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரிடம் நகைகள் உள்ளனவா என்று பார்த்துள்ளார். நகைகள் எதுவும் இல்லையென தெரிந்ததும், அவர்மீது பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அருகிலிருந்த புதரில் உடலை மறைத்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவர் அங்கிருந்து செல்லும்போது, மாணவி உயிருடன் இருந்தாரா அல்லது இறந்தாரா என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு, சில நாட்கள் அதே பகுதியில் சுற்றித்திரிந்து, போலீசார் விசாரணை எப்படி நடைபெறுகிறது, குற்றவாளி பிடிக்கப்பட்டாரா இல்லையா என்பதைக் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!