2025 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி துவக்க ஆட்டக்காரரான பில் சால்ட் ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட தொடங்கினார். ஆனால் அவர் 16 ரன்களுக்கு வெளியேறினார். 2 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்தது. மறுபுறம்கோலி நிதானமாக ஆடினார். பின்னர் விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். 5 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.

பேட்டிங் பவர் ஃப்ளேவான முதல் 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் வீச 7வது ஓவரின் இரண்டாவது பந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 18 பந்துகளில் அவர் 24 ரன்கள் சேர்த்தார். சாஹல் வீசிய ஆட்டத்தின் 9-வது ஓவரின் 3வது பந்தில் ஆர்சிபி கேப்டன் பட்டிதார் மிட் விக்கெட் திசையில் அபாரமான சிக்ஸர் அடித்து, ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தார். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?

ஜேமின்சன் வீசிய ஆட்டத்தின் 11 வது ஓவரின் 4வது பந்தில் பட்டிதார் எல்பிடபள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவர் 16 பந்துகளில் 26 ரன்கள் எடு்ததார். 12 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்தது. 13 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை எடுத்திருந்த ஆர்சிபி, 14 ஓவரில் அதிரடியில் இறங்கியது. சாஹல் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களை எடுத்தது. ஓமைசாய் வீசிய ஆட்டத்தின் 15 ஆவது ஓவரின் 5 வது பந்தில் கிங் கோலி அவரிடமே கேட்ச் கொடுத்து களத்தைவிட்டு வெளியேறினார். அவர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய ஆட்டத்தின் 16 ஓவரில் ஆர்சிபியின் ஜிதேஷ் சர்மா அடுதடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஜேமின்சன் வீசிய ஆட்டத்தின் 17 ஓவரில் ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினர். ஆனால் அதே ஓவரில் எல்பிடபள்யு முறையில் லிவிங்ஸ்டன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவர் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 9 விக்கெட்களை இழந்து 190 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் அணி 191 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அடுத்து களம் இறங்கி உள்ளது.
இதையும் படிங்க: நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!