பல சவால்களைக் கடந்து பல அவமானங்களையும் கடந்து 17 தொடர்களை முடித்து 18 வது தொடரிலாவது கப் அடிக்க வேண்டும் என்ற முழு நோக்கத்தோடும் கடுமையான உழைப்புக்கு பலனாகவும் கிடைத்த ஒரு வெற்றியை தான் இன்று அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 18 வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி அனைவரையும் கலங்கடிக்க செய்தது என்று சொன்னால் மிகையாகாது. காரணம். 18-வது ஐபிஎல் தொடர் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. சுமார் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து அனைவரையும் மகிழ செய்தது. ஆனாலும் அவர்களைத் தொடர்ந்து வந்த பஞ்சாப் அணி 191 ரன்கள் இலக்கை வைத்து களம் இறங்க, ஆர்சிபி அணிக்கு மிகவும் டப் கொடுத்தது.
இதையும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்த மூன்று அணிகள்.. ஓரிடத்துக்கு மல்லுக்கட்டும் இரண்டு அணிகள்!!

இதனால் இந்த வருடமும் கப்பு நமக்கு கிடைக்குமா..? கிடைக்காதா...? என பலரும் ஆதங்கத்தில் அமர்ந்திருக்க, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் அணி. சுமார் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை முதல் முறையாக தோற்கடித்தது ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

இதனைப் பார்த்த பல பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் ஆர்சிபியின் தீவிர ரசிகர்கள் வரை அனைவரும் கண்ணீர் விட்டு 17 வருட உழைப்புக்கு கிடைத்த பலனை மகிழ்ச்சியோடு இன்று அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வெற்றியானது கோலியின் கடுமையான உழைப்பிற்கும் பல நாள் அமைதிக்கும் கிடைத்த வெற்றி என அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இருக்க, தற்பொழுது அகமதாபாத்திருந்து பெங்களூருக்கு வந்த ஆர்சிபி வீரர்களை வரவேற்க ரோட் ஷோவாக சென்று விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்று இருக்கிறார் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.

இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினரை பாராட்டும் வகையில் விதான் சௌதாவுக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கொண்டாட்ட நிகழ்வு தற்பொழுதுநடைபெற்று கொண்டு இருப்பதால் கன்னட மக்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?