தமிழ்நாட்டில் மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கத்தை செப்டம்பர் 17ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் பயின்ற கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
2022ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மதுரையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், முதலில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது. ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ என்று பெயரிடப்பட்டிருந்த இது, பல மாநிலங்களாலும் பின்பற்றப்படும் அளவுக்கு வெற்றி பெற்றது.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்தத் திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றப்பட்டதுடன், அதை மேலும் விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டது.பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று இந்த விரிவாக்கம் நடைபெறும். விருதுநகர் மாவட்டத்திற்கு முதல்வராக விஜய் முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!
தவெகவைத் தொடங்கியதிலிருந்தும், தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் அவர் விருதுநகர் செல்லவில்லை. தற்போது அமைச்சர்களான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் மாவட்டத்தில் இருப்பதால், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தவெக தொண்டர்கள் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளதால், முதல்வரின் பயணத் திட்டம் குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளன. இருப்பினும், விருதுநகரில் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வித் திறன் மேம்பாட்டிற்கு இந்த விரிவாக்கம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனமா? சட்டசபையில் மீண்டும் சூடுபிடித்த விவாதம்!!