வேலூர் மாநகராட்சியின் தற்போதைய மேயராகப் பதவி வகிப்பவர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார். திமுக கட்சியைச் சேர்ந்த இவர், 2022 மார்ச் 4-ஆம் தேதி முதல் வேலூர் மேயராகப் பொறுப்பேற்றுள்ளார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வேலூர் மாநகராட்சியின் மூன்றாவது மேயராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். திமுகவில் 2011-ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக இணைந்த சுஜாதா, 2016 முதல் வேலூர் மாநகர மகளிரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
2011-ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் 56-வது வார்டில் போட்டியிட்டு சிறு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், அனுபவத்துடன் 2022 தேர்தலில் 31-வது வார்டில் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மறைமுகத் தேர்தலில் எதிர்ப்பின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். விதிமீறலில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பரிசுப் பொருட்கள், பணம் உள்ளிட்டவை கொடுப்பதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இது விஜய்க்கும் ஸ்டாலினுக்குமான போர்.!! காதை கிழித்த விசில் சத்தம்… விஜய் ஃபயர் ஸ்பீச்..!!
மேலும் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வேலூர் திமுக மேயர் சுஜாதாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விளையாட்டு உபகரணங்கள் கொடுக்க முயற்சி மற்றும் காரை சோதனையிட விடாமல் தடுத்தது தொடர்பாக மேயரின் ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!