பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் பங்கிபூர் தொகுதியில் அரசியல் strategist பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் (Jan Suraaj) கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் உறுதியானக் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியை ஜன் சுராஜ் கட்சி கைப்பற்றியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் பீகாரின் பிரதான எதிர்க்கட்சியான இராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 1995 முதல் தொடர்ச்சியாக இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்த பாஜக, முதன்முறையாகத் தனது கோட்டையை புதிய கட்சியான ஜன் சுராஜிடம் இழந்துள்ளது.
இதையும் படிங்க: பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!
பீகார் தவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ததியா (Datia) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 6,016 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் மஞ்சல்பூர் (Manjalpur) தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 30,630 வாக்குகள் என்ற பிரம்மாண்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தேசிய அளவில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தல் முடிவுகள், பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசியல் களத்தில் புதிய திருப்பங்களையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!