ஈரோடு மாவட்டம் சிவகிரியில் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும் பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகனும் மகளும் தனியாக வசித்து வரும் நிலையில் தன் மனைவியுடன் ராமசாமி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கவிசங்கர் தன் தந்தைக்கு போன் செய்த போது எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் ராமசாமியும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 சவரன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு இரட்டை கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்..!

இதைத்தொடர்ந்து இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மாதேஸ்வரன், ராஜேஷ், ஆச்சியப்பன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடையதாக கூறி நகைக்கடை உரிமையாளர் ஞான சேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..! போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பறந்த உத்தரவு..!