அதிமுக ஆட்சியில் என் மீது போடப்பட்டத்து அரசியல் பழிவாங்குவதற்காக போடப்பட்ட பொய் வழக்கு என இந்த தீர்ப்பு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது - வழக்கில் விடுவிக்கபட்ட பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பொன்முடி விழுப்புரத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது கலைஞர் முதல்வராக இருந்தபோது. 2006 முதல், 2011 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நான் ஏதோ தவறு செய்ததாக அதற்குப் பிறகு வந்த அதிமுக அரசு பொய் வழக்கை தொடுத்தார்கள்.
குவாரியில் தவறு செய்ததாக கூறி என்மீது பொய் வழக்கை அரசியல் ரீதியாக எதிர் கட்சிகளை பழிவாங்க வேண்டும் என கடந்த 2012-ல் போடப்பட்ட வழக்கு. ஆட்சிக்கு வந்தால் அதனை திரும்பப்பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி உண்மையை எடுத்து சொல்லி. பொய் வழக்கு என நிரும்பிக்கும் வகையில் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை... செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!
இந்த வழக்கை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நிரூபித்துள்ளது. பொய் வழக்குகளை போட்டு திமுகவை முடக்கி விட வேண்டும் என நினைத்தார்கள். அவர்களின் எண்ணம் தோல்வி அடைந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல கலைஞர்கள் ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். இது போன்ற பொய் வழக்குகள் எப்போதும் எடுபடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்.
பொய் வழக்கு என்ற அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார் இது எனக்கு மட்டுமல்ல உண்மையை விரும்பும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. என் மீதும், என் மகன், என் உறவினர்கள் மீதெல்லாம் இந்த வழக்கை தொடுத்தார்கள். இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என பொன்முடி தெரிவித்தார்
இதையும் படிங்க: தீயா வேலை செய்யனும் குமாரு... திமுக நிர்வாகிகளுக்கு பொன்முடி போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!