அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவால் H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய ஐடி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை வெளியிட்டது. இந்தியர்கள் இப்போது தங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி உதவி பெறலாம். தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியான அறிவிப்பின்படி, இந்திய மக்கள் அவசர உதவிக்காக +1-202-550-9931 என்ற செல் எண்ணை அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம். "இந்த எண் உடனடி அவசர உதவிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர்.. அதிமுக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்ப்பு..!
இதனிடையே அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை, தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது. H-1B விசா, அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப துறைக்கு சிறப்பு திறன்களை கொண்ட பணியாளர்களை ஈர்க்கும் முக்கிய கருவியாகும். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 85,000 விசாக்களில் 71-72% இந்தியர்களுக்கே கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து வரும் ரெமிட்டன்ஸ் மற்றும் அமெரிக்க ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி இதன் மீது சார்ந்துள்ளன.
புதிய கட்டணம் காரணமாக, புதிதாக விண்ணப்பிக்கும் இளம் பொறியாளர்கள் பெரும் நிதி சுமையை சந்திக்க வேண்டியிருக்கும். இது குடும்பங்களுக்கு பெரும் சவால்களையும் ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள் போன்ற TCS, Infosys, Wipro ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு உள்ளூர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. சிலர் விசா புதுப்பிப்புகளை விரைவுபடுத்த அறிவுறுத்துகின்றனர்.

தூதரகத்தின் இந்த அவசர நடவடிக்கை, லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதலாக உள்ளது. இரு நாட்டு அரசுகளிடையே இது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!