இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் தொடர்பான நடவடிக்கைகள் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் புரிந்துணர்வு எட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இன்று அழைப்பை தொடங்கியதாகவும், சமூக முடிவு எட்டப்பட்டதால் இருதரப்பினரும் தரை, வான் மற்றும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.