முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக பரவும் தகவலுக்கு பதிலளித்து பேசினார்..தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ளார். தனது கட்சியை முன்னிலைப்படுத்தி 2026 இல் முதல்வர் அரியணையில் ஏறுவதை நோக்கமாகக் கொண்டு களமாடி வருகிறார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இளைய சமுதாயத்தின் வரவேற்பு அதிகளவு இருந்தது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே விஜய்க்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்க அனுபவம் வாய்ந்த நபர்கள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

விஜயின் தேர்தல் திட்டமிடுதலில் குறைபாடுகள் இருப்பதாகவும் அரசியல் அனுபவசாலிகள் யாரும் இல்லாததால் தான் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதில் கொடுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
இதையும் படிங்க: நாங்களும் சுப்ரீம் கோர்ட் போவோம்… திமுகவுக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சவால்…!
அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தின் இணைந்தார். செங்கோட்டையனைத் தொடர்ந்து தானும் தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். இணையத்தில் பரவும் தகவலை திட்டவட்டமாக ஜெயக்குமார் மறுத்து உள்ளார். புலிக்கு வாலாக இருப்பனே தவிர பூனைக்கு தலையாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இதையெல்லாம் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: 2026ல் விஜய் தான்…! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உறுதி..!