ஜபல்பூர், ராய்ப்பூர் மற்றும் பிற இடங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் உயர்ந்து அச்சமின்றி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ஜபல்பூர், ராய்ப்பூர் மற்றும் பிற இடங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் கூறி முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர் காய நினைக்கும் கலவர கும்பலை அடக்க வேண்டியது அனைவரது கடமை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது என்றும் குணமும் இருக்கிறது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் சர்ச் போயிட்டாரு... ஸ்டாலின் கோவிலுக்கு போவாரா? முதல்வருக்கு தமிழிசை கேள்வி...!
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர், ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது என்றும் கூறினார். எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: 2 மாவட்டங்களில் டைரக்ட் விசிட்... திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!