சேலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவமானம் தாங்காமல் 15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் திமுக ஆட்சியின் சட்ட முழங்கு பிரச்சனையை எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி, அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள், நெஞ்சை கனக்கச் செய்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாலியல் கொடுமை செய்யும் மிருகங்கள் எல்லாம் எந்த சொரணையுமின்றி சொகுசாக வாழ்ந்து வரும் திமுக ஆட்சியில், பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் தாங்காமல் வீட்டிற்குள் முடங்கிப் போவதும், தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதும் கொடூரமானது என்று கூறினார். “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகப் பெண்களை மனதளவிலும் உடலளவிலும் கவனமாகப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!
ஆனால், ஆளும் அரசு பெண்களைக் கைவிட்டாலும், அதன் கீழ் இயங்கும் ஏவல்துறை பெண்கள் பாதுகாப்பை அடகு வைத்தாலும், நீதியின் மீது கொண்ட நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது என்ன தெரிவித்துள்ளார். மன உறுதியுடன் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டுமே தவிர, தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!