கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே புரட்டி போட்ட கோவிட்-19 பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். முழு ஊரடங்கு இதுவரை கண்டிடாத அளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக கோவில் 19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கொரோனா அலை ஓய்ந்தது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. எகிறும் எண்ணிக்கை.. மீண்டும் லாக்டவுன்..?

அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்துக்கு முன்பே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்குள் செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் தங்கள் பாதுகாப்பிற்காக முகாம்சம் அணிந்து கொள்வது நல்லது என்று பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!