கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து மும்பைக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த கப்பலில் தீ விபத்தானது நிகழ்ந்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் துறைமுகத்திலிருந்து 45 கடல் மைல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த வான் ஹாய் 503 சரக்கு கப்பல் தீப்பற்றி எரியும் நிலையில் இந்திய கடலோர காவல் படை உள்ளிட்டோர் மீட்பு பணிக்காக விரைந்துள்ளனர். இந்த சரக்கு கப்பலில் 22 மாலுமிகள் பயணித்த நிலையில், 4 பேர் மாயமாகியுள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, கப்பலில் உள்ளவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கப்பலில் இருந்த ஊழியர்கள் பலர் கடலில் குதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜூன் 19ல் இடைத்தேர்தல்.. தொகுதிகளை பட்டியலிட்டு வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!

மேலும் கன்டெய்னர்களில் இருந்த பொருட்கள் என்ன என்பது குறித்த தகவல் தெரியாத நிலையில், அதிகாரிகள் விரைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கவிழ்ந்து கண்டனர்கள் கடலில் விழுந்ததில் கடல் பரப்பு முழுவதும் சேதமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்.. சிக்கியவர்களின் நிலைமை என்ன..?