தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களாக பழனி திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் விளக்குகிறது. இந்த கோவில்களுக்கு நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இந்த பக்தர்களும் அதிக அளவில் வருவதால் மக்கள் மட்டுமே அதிகரித்து காணப்படுகிறது. நீண்ட நேரம் வரிசையில் என்று பார்த்திருக்கும் தரிசனம் செய்து வருவதால் காத்திருப்பு நேரம் அதிகமாக சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது.
இவற்றை தவிர்க்கவும் காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலை துறை சார்பில் பிரேக் தரிசன முறையை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நிறம் குறையும் எனக்கு கூறப்படுகிறது. முதற்கட்டமாக திருச்செந்தூர், திருவண்ணாமலை அண்ணாமலையார் இந்த பிரேக் தரிசன முறை கொண்டு வரப்பட இருப்பதாகவும் இதற்காக ஆன்லைன் மூலம் தரிசனத்தின் தேதி நேரத்தை பர்த்டேக்கு பதிவு செய்தால் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக சாமியை தரிசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேக் தரிசனம் என்பது தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன் விரைவாக தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கிறது. பிரேக் தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்தோடு பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பழனி கோவிலைப் பொறுத்தவரை, 300 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த நடைமுறை ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைமுறையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் பட்டமாக மூன்று கோவில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் இதனை தொடர்ந்து சமயபுரம், ஸ்ரீரங்கம் கோவில்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!
இதையும் படிங்க: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்..!