செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயில், தமிழ்நாட்டின் பழமையான மற்றும் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக இந்த கோயிலுக்கு சொந்தமான பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தது. தனிநபர்கள், சில சமயங்களில் செல்வாக்கு மிக்கவர்களால் இந்த நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நீண்டகால இழுபறி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், சமீப காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு இதற்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றம், அறநிலையத் துறைக்கு கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேலாக அறிக்கை வராததால் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

காவல்துறை உதவியுடன், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தொடங்கியது. 60-க்கும் மேற்பட்ட புல எண்களைக் கொண்ட சுமார் 226 ஏக்கர் 92 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.700 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் 19 இடங்களில் கோயில் பெயர்ப் பலகைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டன.
இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!
இந்த நிலையில், திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்தது. அறநிலையத்துறையின் அறிக்கையை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: “நேற்று கமல்... இன்னைக்கு விஜய்... நாளைக்கு சிம்பு... எந்த கொம்பன் வந்தாலும்...” - படு ஓபனாக சவால் விட்ட சி.வி.சண்முகம்...!