பாஜக கூட்டணியில் இணைவதற்காக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவின. தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் பேசி வருவதாக கூறப்பட்டது. அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் விஜய் இணைய இருப்பதாக வெளியான தகவல் அரசியலில் பேசிப் பொருளாக மாறியது.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகம் வாய் திறக்காத சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு தமிழக வெற்றி கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாஜக, அஇஅதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோருடன் தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறினார். குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: தேர்தல் வேலை இருக்கு...! சிபிஐக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை..!!
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று என்றும் இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன எனவும் கூறினார். உண்மை தன்மையை ஆராயாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!