தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவுடன், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சாரம், தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். கட்சியின் தேர்தல் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தீவிரமடைந்தன. ஜனவரி 2026-ல் விஜய், தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்தார். இந்தக் குழு மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் பிரச்சார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றது.

பிப்ரவரியில் தேர்தல் அறிக்கை உருவாக்கும் பணிகள் வேகம் பெற்றன. மார்ச் இறுதியில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜய் அனல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: டெக்னாலஜிதான்..! Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை..!!
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் விஜய் பரப்புரை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!