கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். இதனிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களின் பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பிறகு ஒரு ஆல்பம் பாடலை இயக்கினார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அடுத்ததாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகின்றார் ஐஸ்வர்யா. மறுபக்கம் தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் வருகின்றார். விவாகரத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியே அவர்களின் மகன்களுடன் விழாக்களிலும், பொது இடங்களிலும் காணப்பட்டு வந்தனர். தனுஷ் அவரது பட விழாக்களுக்கு தன் இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு வருகின்றார்.
இதையும் படிங்க: நடிகர் சூரியுடன் நடக்க இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா..!

ஆனால் தற்போது தன் மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு இருக்கின்றனர். இதுக்குறித்து நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா மற்றும் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு proud parents என போட்டிருந்தார்.

இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் யாத்ராவிற்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தன் மூத்த மகன் யாத்ரா பட்டம் வாங்கி இருப்பதை தனுஷ் மிகவும் பெருமையாக கருதுவதாக இணையத்தில் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. பலர் இந்த புகைப்படத்திற்கு பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை செய்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: சரத்குமாரை வம்புக்கு இழுத்த சீமான்... நெத்தியடி பதில் கொடுத்து அசத்திய சுப்ரீம் ஸ்டார்!!