தமிழ் திரையுலகின் ரூட்டே குடும்ப படங்களிலிருந்து முற்றிலுமாக மாறி ஆக்சன் காட்சிகள், அதிரடி காட்சிகள், கிளாமர் காட்சிகள் என குடும்பங்களே தியேட்டருக்கு வர முடியாத அளவிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டதான சூழலில் புதிய படங்களை காண குடும்ப ஆடியன்ஸ் ஒருவருக்கும் நாட்டம் இல்லாமல் போக என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்ற தயாரிப்பாளர்கள் அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தனர்.

அதன்படி, மக்கள் அனைவரும் விரும்புவது பழைய படங்களைப் போலவே குடும்ப காட்சிகளையும் சென்டிமென்ட் காட்சிகளையும் தான் என்பதால், பழைய திரைப்படங்களையே ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் மீண்டும் தயாரித்து அத்திரைப்படங்களை ரீலீஸ் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் ஏரிய டூரிஸ்ட் பேமிலி பட டைரக்டர்... நொடி பொழுதில் டிரைவர் செய்த செயலால் அதிர்ச்சி..!
இருப்பினும் இப்போதுள்ள இயக்குனர்கள் சிலர், மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு குடும்ப கதை கொண்ட படங்களை இயக்குகின்றனர். சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன், மாமன் உள்ளிட்ட ஃபேமலி செண்டிமெண்ட் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் பயங்கர ஹிட் அடித்தது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் நடிகை சிம்ரன், நடிகர் சசிகுமார் ஆகியோருடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோரின் நடிப்பில் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி அதிரடியாக வெளியானது 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம். முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மக்கள் கண்டு ரசித்து வந்தனர். மேலும் இப்படம் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் கடல் வழியாக தனது குடும்பத்தை அழைத்து வரும் சசிகுமார், யோகி பாபுவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேலை தேடி வந்த அவருக்கு இறுதியாக கார் ஓட்டும் வேலை கிடைக்க தனது குடும்பத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலாக இலங்கையில் இருந்து வந்த ஒரு குரூப் வெடிகுண்டு வைத்ததாக தகவல்கள் பரவ போலீஸ் டீம் அவர்களை தேடி சென்னைக்கு வருகிறது. ஆனால் அகதியாக இருந்த சசிகுமார் குடும்பத்தை காப்பாற்ற ஒரு காலணியே செய்த உதவி தான் இத்த திரைப்படத்தின் அல்டிமேட் காட்சியாக இருந்தது.


ஏற்கனவே நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா, இயக்குனர் ராஜமவுலி, நானி, கிச்சா சுதீப் ஆகியோர் படத்தையும், அதை இயக்கிய அபிஷன் ஜீவிந்த்தையும் பாராட்டினர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த்தும் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், எந்த காரணத்திற்காக நான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தேனோ, அது இப்போது நிறைவேறியது போல் உணர்கிறேன், நடிகர் ரஜினிகாந்த் என் பெயரைச் சொல்லி என்னைக் கட்டிப்பிடித்த விதம் - என் உடம்பெல்லாம் மெய்சிலிர்த்தது. அவரது ஒரு புன்னகை, நான் குழந்தைபோல் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் தாமதமாக வந்ததைப் போல உணர்ந்தேன், ஆனால் அது எனக்குத் தேவையான நேரத்தில் சரியாக வந்தது. என்ன ஒரு மனிதன், என்ன ஒரு எளிமையின் சின்னம். என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அய்யய்யோ சிம்ரனின் உண்மையான பெயர் இதுதானா..! மனம் திறந்த நடிகை..!