மதுரை குறித்து பார்த்தால் நம் நினைவுக்கு உடனே வருவது என்ன..? அதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். எப்பொழுது நீங்கள் மதுரைக்கு சென்றாலும் அங்கு இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமியை வழிபட்டு அதற்குப் பின்பாக மதுரையில் ஜிகர்தண்டாவை பருகி நல்ல அசைவத்தை ஒரு பிடித்து தூங்கினால் தான் அது மதுரைக்கே சிறப்பு.

மதுரை என்றால் வீரம் பிறந்த மண் என்று சொல்லுவர். அதனால் தான் இயக்குனர் அட்லியின் 'மெர்சல்' திரைப்படத்தில் கூட, 'மதராசி நஹி மதுரவாசி' என சொல்லும் பொழுது நம்முடைய நாடி நரம்பு எல்லாம் முறுக்கு எடுத்து நிற்கும். அதுதான் மதுரை மண்ணின் சிறப்பே. அந்த வகையில், தற்பொழுது சினிமாக்களில் நடித்துவரும் பல நடிகைகள் வெக்கேஷன்க்கு ஒன்று வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் அல்லது இதுபோன்ற கோவில் குளங்களாக சுற்றி அவர்கள் மன அமைதிக்காக சுற்றி வருகின்றனர். இன்னும் வெளியூர்களில் அதிகமாக சுற்றாத நடிகைகள் தற்பொழுது திருமணமாகி தனது கணவருடன் ஹனிமூன் என கூறிக்கொண்டு உலகத்தையே சுற்றிவரும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்க்கும் பல இல்லத்தரசிகளும் நாமும் இப்படி சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தனது கணவன் மார்களை கசக்கி பிழிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நடிகர் ரஜினியின் 'காலா' திரைப்படத்திலும் அஜித்தின் 'வலிமை' திரைப்படத்திலும் நடித்திருந்த நடிகை ஹூமா குரேஷியை தெரியாதவர்கள் யாருமே இங்கு இருக்க முடியாது. வலிமை திரைப்படத்தில் வில்லனுடன் அட்டகாசமாக சண்டை பிடிக்கும் ஹூமா குரேஷி, டெல்லியை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலை பட்டம் படித்தவர். இதனை அடுத்து நடிப்பின் மீது அதிக ஆர்வம் காட்டிய இவர் சின்னத்திரை தொடர்களிலும் மாடல் அழகியாகவும் அதிகமாக பணிபுரிந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கமல் வச்ச குறி தப்பல.. தக் லைஃப் படத்தை தொட்ட நீ கெட்ட.. கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் வார்னிங்..!

அதுமட்டுமல்லாமல் மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவரை samsung மொபைல் போன் விளம்பரத்தில் அதிகமாக பார்த்திருக்க முடியும். அப்படிப்பட்ட இவரது திறமையை முதலில் கண்டுபிடித்தவர் யார் என்றால் அவர் தான் அனுராக் காஷ்யப். இவர் தான் முதன் முதலில் இவருடைய திறமையை கண்டுபிடித்து அவரது தயாரிப்பு நிறுவனத்தில் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் முதல் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிட்டிருந்தனர். குற்றங்களை வெளிக்கொண்டு வரும் திரைப்படமான 'கேங்ஸ் ஆஃப் வாசேபூர்'. இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பை கண்டு பலரும் வியந்து போயினர். அது மட்டுமல்லாமல் இவரது நடிப்பை பார்த்த பல விமர்சகர்கள் அவரையும் வெகுவாக பாராட்டினர்.

ஆகவே இந்த திரைப்படத்திற்காக அவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதன் பின்பு தான் இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க, அதில் தொடர்ந்து நடித்து வந்து கொண்டு இருக்கிறார். இதுவரை ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் அதிகமாக நடித்திருக்கும் இவர் இதுவரை மூன்று முறை விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். மேலும் தனது நடிப்புக்காக பல விருதுகளையும் தன் வசம் பெற்று இருக்கிறார். இப்படி பாலிவுட் ஸ்டார் ஆக வலம் வரும் ஹூமா குரேஷி, தனது வெக்கேஷனை கழிக்க வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியுலக மாநிலங்களுக்கோ சென்று இருக்கலாம். ஆனால் அவர் மதுரை கோவிலுக்கு தான் வருவேன் என்று அடம்பிடித்து கோவிலுக்கு வந்து சாமி வழிபட்ட பின்பு அங்கு கொடுத்த உணவுகளை சாப்பிட்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் என்னதான் உலக நாடுகள் முழுவதும் சுற்றினாலும் மதுரை மண்ணில் காலடி எடுத்து வைத்தவர்களுக்கு, இனி வரும் காலம் அனைத்தும் மகிழ்ச்சி காலமாகவே மாறும். அதன்படி உங்களது வாழ்க்கையில் இனி மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் என அவரை வாழ்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த அசிங்கம் உனக்கு தேவையா கோபி.. மாளவிகா மோகனன் போட்டோ ஷூட்.. கலாய்த்த நெட்டிசன்.. தக் பதிலடி...!