மனுஷன் சாவதிலும் நிம்மதி இல்லை சாவில் இருந்து மீண்டு வந்தாலும் நிம்மதி இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் இன்று நடந்திருக்கும் ஏர் இந்தியா விமானத்தின் விபத்துக்கள் குறித்த செய்திகள் இருக்கிறது. அந்த வகையில் இன்று தனக்கு தோன்றுவதை எல்லாம் இணையத்தில் பேசி வருகிறது ஒரு கூட்டம். அவர்களைப் போல தனது சேனலின் வீவஸ்களை ஏற்றுவதற்காக பல வீடியோக்களை கட் செய்து இதுதான் உண்மை என ஒரு கூட்டம் சொல்லி வருகிறது. ஆனால் இதில் மரித்தவர்களை குறித்தோ அவர்களது குடும்பத்தின் நிலைகளை குறித்த பேச ஒருவரும் இல்லை.

இப்படிபட்ட இந்த அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானத்தின் விபத்தை குறித்து இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறது. சுமார் 242 பயணிகளுடன் புறப்பட்ட இந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக உண்டான விபத்தில் கிட்டத்தட்ட 241 பேர் உயிரிழந்து உள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளும் மிகவும் மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் பயணிக்க தொடங்கிய 25 வினாடி பொழுதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழும் என ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அதேபோல் இந்த விமான விபத்தில் கல்லூரியில் மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மட்டும் பலி எண்ணிக்கை 274 ஆக உள்ளது. பல பேரின் உடல்கள் தீயில் கருகி இருப்பதால் அவர்களது உடலை அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. ஆதலால் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை அடையாளம் கண்டு பிறகு குடும்பத்தாருக்கு அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் டாடா நிறுவனத்தின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும்
இதையும் படிங்க: என்னுடைய ட்ரீமே வேற.. படத்தில் நடிக்க துளியும் விருப்பமில்லை.. கண்கலங்கி பேசிய நடிகர் தனுஷ்..!

உயிர் ஆபத்தான நிலையில் போராடி வருபவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் எனவும் விமான விபத்தில் சிக்கிய விடுதியின் கட்டிடத்தை தாங்களே சரி செய்து தருவதாகவும் டாடா நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இப்படி இருக்க இந்த விபத்தைக் கண்டு பல பயணிகளும் விமானத்தில் செல்ல அஞ்சி வரும் வேளையில், ஏர் இந்தியா விமானத்தின் தரத்தை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும், சில விமான விபத்து ஆராய்ச்சி வல்லுநர்கள் சிலர் கோ-பைலட்டின் தவறுதலால் தான் இப்படி நடந்து இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இப்படிப்பட்டதான சூழ்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டி தேடி வந்த நிலையில் தற்பொழுது கருப்பு பெட்டியும் கிடைத்திருப்பதால் விரைவில் விமானத்தின் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என ஏர் இந்தியா தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்பொழுது அனைவரது கவனமும், விமான விபத்தில் இருந்தது தப்பிய விஸ்வாஸ் குமார் மீது சாய்ந்துள்ளது. சிலர் விமான விபத்துக்கு அவர் தான் காரணம் எனவும் விமானம் மேலே செல்லும் பொழுது அவர் எக்ஸிஸ்ட் கதவை திறந்தால் தான் விமானம் கீழே இறங்கி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஒரு சிலர் ஆதரவு செலுத்தினாலும், இன்னும் சிலர் எதிர்த்தும் வருகின்றனர். அவர்களின் வரிசையில் தற்பொழுது நடிகை கஸ்தூரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

தற்பொழுது தனியார் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி பேசுகையில், " விமான கோரவிபத்தில் இருந்து உயிர்பிழைத்த விஸ்வாஸ் குமார், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த லண்டன் வாசி, இவருடன் பிறந்தவர்கள் என பார்த்தால் மூன்று சகோதரர்கள். பிரிட்டனில் தனது மனைவி மற்றும் 4 வயதுடைய மகனுடன் வசித்து வந்த இவர், தனது பெற்றோரை பார்க்க இந்தியா வந்து இருக்கிறார், பிறகு மீண்டும் பிரிட்டன் திரும்பிய போது தனது இளைய சகோதரனுடன் ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கிறார். பிறகு தான் இந்த விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறார்.

இவர் மட்டும் தனியாக சென்றால் பராவாக இல்லை. ஆனால் இவருடன் பயணம் செய்த இளைய சகோதர் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நேரத்தில் உங்களுக்கு தோன்றியதை எல்லாம் சொல்லி யாரையும் குறை சொல்லாதீர்கள். உண்மையில் விபத்துக்கு காரணம் அரசாங்கம் தான். அது மெத்தனமாக இருந்தது. விமானிகள் கவனக்குறைவாக இருந்தாங்க என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. ஏனெனில், இந்த விபத்தில் முன்னாள் முதலமைச்சரே உயிரிழந்து இருக்கிறார் என்று சொல்லும் பொழுது நீங்கள் அவர் மீது தான் தவறு, இவர் மீது தான் தவறு, என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

அதுமட்டுமல்லாமல் ஒரு கூட்டம் மோடிக்கு நேரம் சரியில்லை என்று மனிதாபிமானமே இல்லாமல் பேசுவதை கேட்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது, எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பதை தெரிந்து பேச கற்றுக்கொள்ளுங்கள்" என நடிகை கஸ்தூரி காட்டமாக பேசி உள்ளார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு கேள்வி யாராவது கேட்பார்களா..? லோகேஷ் கனகராஜ் பேச்சால் நாகார்ஜுனா எடுத்த முடிவு... கூலி படத்தின் நிலை என்ன...!