என்று உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் அதிகமாக வளர ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அழிவுகளும் ஆரம்பித்து தான் வருகிறது என்றே கூற முடிகிறது. ஒரு பக்கம் ஏர் இந்தியா விமான விபத்து நடக்கிறது என்றால் மறுபக்கம் படப்பிடிப்புகளில் தண்ணீர்கள் புகுவது என புது...புது காரியங்கள் நம் கண்கள் கண்டு கொண்டு வருகிறது.

இப்படிப்பட்டதான சூழ்நிலைகளில் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என ஒரு இயக்குனர் நினைத்து விட்டால் உடனே அதற்குண்டான இடங்களை முதலில் தேட ஆரம்பித்துவிடுவார். இந்தப் பாடலை இந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் இந்த காட்சிகளுக்கு பின்பாக இத்தனை பேர் இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு ஆக்சன் காட்சிகளை மலைத்தொடர்களில் இருந்தும் காடு பகுதிகளில் இருந்தும் எடுத்தால் நன்றாக இருக்கும் என படத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இயக்குனரிடமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் என்ன தான் பேக்ரவுண்ட் காட்சிகள் அழகாக இருந்தாலும் அதனை ஒளிப்பதிவாளர் அழகாக எடுக்கவில்லை என்றால் படத்தின் காட்சிகள் அனைத்தும் ஃபிளாப்பிளே சென்று முடியும்.
இதையும் படிங்க: மீண்டும் திரையில் வந்த நடிகர் விஜயகாந்த்.. படைத்தலைவன் படத்தைக் குறித்து கண்ணீர் மல்க பேசிய பிரபலங்கள்..!

இப்படி இருக்க சில காட்சிகளை போக்குவரத்து அதிகம் நிறைந்த இடங்களில் எடுக்க நினைத்தாலும் அவைகளை நம்மால் எடுக்க முடியாது. ஆகவே கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எந்த சினிமா படங்களை எடுத்தாலும் அதில் பேக்ரவுண்ட் காட்சிகள் பாதி அளவிற்கு ப்ளூ மேட்டில் எடுத்ததாகவே இருக்கும். இல்லையெனில் மிகப்பெரிய செட்டை அமைத்து எடுத்ததாகவே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பார்த்தால் ஏவிஎம் ஸ்டுடியோ போல பல ஸ்டுடியோக்கள் உள்ளது. அதேபோல ஹைதராபாத்திலும் மிகப்பெரிய ஸ்டுடியோவும் இருப்பதால் பல படங்களை இப்படிப்பட்ட ஸ்டுடியோக்களை வாடகைக்கு எடுத்து தான் இயக்கி வருகின்றனர் இயக்குனர்கள்.

மேலும் பாகுபலி போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுக்க வேண்டுமானாலும், எந்திரன் போல மிகப் பெரிய பிரம்மாண்டமான படங்களை எடுக்க வேண்டுமானாலும் அவைகளை ஊருக்குள் வைத்து எடுப்பது என்பது அசாத்தியமான ஒன்றாகவே காணப்படுகிறது. ஆதலால் அதற்கென பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்து பேக்ரவுண்டுக்குள் பல காரியங்களை எடிட்டிங் மூலமாக ஒன்று சேர்க்கின்றனர் படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள். இதனாலே திரைப்படங்கள் அனைத்தும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அட்டகாசமாக இருக்கிறது. இதே போலத்தான் தற்பொழுது நடைபெற்று வந்த மிகப்பெரிய படத்தின் படப்பிடிப்பின் வேளையில் செட்டுக்குள் தண்ணீர் புகுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்சரண் தயாரிப்பில் நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'தி இந்தியன் ஹவுஸ்' என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த அசம்பாவிதம் நடந்து உள்ளது... அந்த வீடியோவை பார்க்கும் பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் வெள்ளம் போல தண்ணீர் பட செட்டுக்குள் திரண்டு வருவதும் அதனால் பல பொருட்கள் சேதம் ஆவதும் காட்சிகளாக இடம் பெற்று இருந்தது. இதனைப் பார்த்த மக்களுக்கு சுனாமி தான் வந்து விட்டதோ என நினைக்கும் அளவிற்கு தண்ணீர் ஆக்ரோஷமாக வந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, இதனைக் குறித்து விளக்கம் அளித்த பட குழுவினர், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்த தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்ததால் அதிலிருந்து மொத்த தண்ணீரும் செட்டுக்குள் வந்துவிட்டது என தெரிவித்து இருந்தனர்.

மேலும் இந்த விபத்தின் பொழுது யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் கதாநாயகனான நிகில் சித்தார்த்தாவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் அவரது ரசிகர்கள் இதனை நம்ப மறுக்கவே, தற்பொழுது அவரது எக்ஸ் தலத்தில் படப்பிடிப்பில் நடந்த வீடியோவை பதிவிட்டு அதற்கு மேலே தான் நலமுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், " நாங்கள் அனைவரும் இங்கு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் எடுக்கப்பட்டதால் பெரிய விபத்தில் இருந்து நாங்கள் அனைவரும் தப்பித்து இருக்கிறோம். ஆனால் என்னதான் நாங்கள் தப்பித்தாலும் விலை உயர்ந்த பல பொருட்களை இழந்து இருக்கிறோம். பொருட்கள் போனாலும் பரவாயில்லை எங்கள் உயிரை எந்த சேதமும் இல்லாமல் கடவுள் காப்பாற்றி இருக்கிறார்" என மனதுருக தனது ரசிகர்களுக்கு பதிவை வெளியிட்டு இருக்கிறார் நிகில் சித்தார்த்தா.

அவரது பதிவை கண்ட பின்பு தான் அவரது ரசிகர்களுக்கு சற்று மன ஆறுதலே வந்து உள்ளது.. இருப்பினும் இது போன்ற படப்பிடிப்புகளின் பொழுது பாதுகாப்பு உபகரணங்களையும் வைத்துக் கொள்வது அவசியம் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.. பட்டையை கிளப்ப மீண்டும் வருகிறது தளபதியின் ஹிட் படம்..!