தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ருஹானி ஷர்மா.

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

குறிப்பாக, தெலுங்கில் அவர் நடித்த படங்கள் மூலமாக ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

அதேநேரம், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ருஹானி, அவ்வப்போது பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாவது வழக்கம்.
இதையும் படிங்க: ஒரே தேதியில் மோதும் 'சிக்மா' – 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'..!! ராஜமவுலி படைப்பு களமிறங்குவதால் சந்தீப் கிஷனுக்கு சிக்கலா..!

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் ருஹானி ஷர்மா வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

எளிமையான வெள்ளை நிற ஆடையில் விதவிதமான போஸ்களில் அவர் எடுத்துக்கொண்டுள்ள இந்த புகைப்படங்கள், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ருஹானி ஷர்மா தமிழில் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பரத் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் ருஹானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்திற்கு தொடக்கமாக அமைந்தது.

தமிழில் அறிமுகமான பிறகு, அவர் தெலுங்கு திரையுலகில் தனது கவனத்தை திருப்பினார்.

அங்கு வெளியான ‘சீ லா சோ’ (Chi La Sow) திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. குறிப்பாக, கதாநாயகியாக அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோவில் இருப்பது நான் கிடையாது..!! போலி AI வீடியோ குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஷாலினி பாண்டே..!