"அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது.

இத்தனை பெருமைகளுக்கும்,பாடல்களுக்கும் சொந்த காரனான இவரது பாடல்களை கேட்க முடியும் ஆனால் உபயோகிக்க முடியாது. அப்படி செய்தால் உடனே காப்பி ரைட்ஸ் போடுவார். இசையில் அதிக மென்மையாக இளையராஜாவிடம் பேசும் போது கொஞ்சம் பார்த்தே பேச வேண்டும் என்பர். இப்படி இருக்க, இளையராஜா இசையமைப்பதுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் இசைகளை ரசிகர்கள் மனதில் அலைபாய விடுவதில் வல்லவர். அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் லண்டனில் 'சிம்பொனி' இசையை 1½ மணி நேரம் அரங்கேற்றி, ஆசிய கண்டத்திலேயே சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனை படைத்தார். மேலும், லிடியன் நாதஸ்வரத்தை வைத்து இளையராஜா சிம்பொனி அரங்கேற்ற போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதையும் படிங்க: இசையமைப்பில் சூப்பர் ஸ்டாராக மாறிய அனிருத்..! சம்பள வரிசையில் நம்பர் 1 ஆக வலம் வந்து அசத்தல்..!

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம் தான். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா..! என அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தாக பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சை ஆனது. இந்த சூழலில், சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இவரது பாடல் அனுமதியின்றி உபயோகிக்கப்பட்டதாக படக்குழுவினர் மீது ரூ.5 கோடி பணம் கெட்டி வக்கீல் நோட்டிஸ் அனுப்பி வார்னிங் கொடுத்திருந்தார் இளையராஜா.
இந்த நிலையில், லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50வது ஆண்டு கால இசை சாதனையை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடைபெறும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், அரசு சார்பில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என தெரிகிறது. இப்படி இருக்க, பல்வேறு காரணங்களால் அந்த விழா ஜூன் 2ம் தேதி நடைபெறாமல் தள்ளிப்போய் உள்ளது. உண்மையிலேயே ஜூன் மாதம் 3ம் தேதிதான் இளையராஜாவுக்கு பிறந்தநாள் என்றாலும் அன்றைய தினம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக தனது பிறந்தநாளை இளையராஜா கொண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும்.

ஆக விரைவில் அவரது பாராட்டு விழாவுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு கங்கை அமரன்..? தயாரிப்பாளர் அதிரடி கேள்வி..!