பார்க்க ஒல்லியாக இருக்கும் நடிகர் தனுஷை வசைப்பாடாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நெகட்டிவிட்டியை தன் மேல் சுமந்து கொண்டு செல்லும் இவர் அதனை தனது பேச்சால் பாசிட்டிவிட்டிவாக மாற்றி விடுவார். அந்த அளவிற்கு அவரது பேச்சும் நடிப்பும் அபாரமாக இருக்கும்.

மக்களால் இன்று தனுஷ் என்று அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரிராஜா. ஆரம்பத்தில் இவரது மெல்லிய உடல் தோற்றத்தைக் கண்டு பலரும் அவரை எள்ளி நகையாடினர். ஆனால் அன்று அவர்களுக்கு தெரியவில்லை இந்த ஒல்லி உடம்புக்காரர் தான் ஒரு காலத்தில் ஹாலிவுட் வரை சென்று கலக்குவார் என்று. அந்த வகையில் தனது நடிப்பில் அபார திறமையை வெளிக்காட்டும் நடிகர் தனுஷ் இன்று, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை தனது சினிமா வாழ்க்கையில் நடத்திக் கொண்டுதான் வருகிறார். எப்படி நடிகர் சிம்பு 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று பெயர் பெற்றாரோ, நடிகர் விஜய் 'தளபதி' என பெயர் பெற்றாரோ, நடிகர் அஜித் 'தல' என்று பெயர் பெற்றாரோ, இவர்கள் வரிசையில் நடிகர் தனுஷ் 'இந்தியன் புரூஸ்லி' என்னும் புனைப்பெயரை கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க: "If you are bad i am your dad" வதந்தி பரப்புகிறவர்களுக்கு தனுஷ் சொன்ன தக் பதில்..!

இப்படி பல திறமைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் தனுஷ், பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர். பிறப்பால் திரையுலக குடும்பத்தை சேர்ந்த இவர் 2002-ம் ஆண்டு இவரது தந்தையின் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதில் இவரை பார்த்து பலரும் கேலி கிண்டல்கள் செய்தாலும் அதனை குறித்து துளியும் கவலை படாத தனுஷ் தனது பணியை திறம்பட செய்து வந்தார். இதனை அடுத்து பல படங்களில் நடித்த தனுஷின் மீது காதல் வைக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004 நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக காதல் திருமணம் செய்து கொண்டார் தனுஷ். தற்பொழுது இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்பொழுது வரும் பல சர்ச்சைகளால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் பிரிந்துள்ள நிலையில் சமீபத்தில் இவர்களது மகனின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற இருவரும் தனது மகன்களின் ஆசைகளுக்கு இணங்கி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நடிகர் தனுஷின் மீது பல சர்ச்சைகள் சுமத்தப்பட்டாலும் அதிலிருந்து ஒற்றை வார்த்தையில் வெளியே வந்து விடுவார் நடிகர் தனுஷ். இப்படிப்பட்ட நடிகர் தனுஷ் இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, ட்ரீம்ஸ், சுள்ளான், புதுக்கோட்டை சரவணன், தேவதையை கண்டேன், அது ஒரு கனா காலம், திருவிளையாடல் ஆரம்பம், புதுப்பேட்டை, பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன்,

குட்டி, உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, அம்பிகாபதி, நையாண்டி, மரியான், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்கமகன், தொடரி, கொடி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வடசென்னை, அசுரன், பக்கிரி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம், கர்ணன், மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், ராயன், இளையராஜா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் குபேரா, தனுஷ் 55, இட்லி கடை, D56, மாரியப்பன் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் 'குபேரா '. இப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியானது, ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்பொழுது முதலில் ஒருவர் நடிகர் தனுஷிடம் ஹிந்தியில் பேச சொல்லி மைக்கை கையில் கொடுக்க அதற்கு அவர்,

"எனக்கு ஹிந்தி எல்லாம் பேச தெரியாது. ஆங்கிலத்தில் வேண்டுமானால் பேசுவேன் அதுவும் கொஞ்சம் தான் பேசுவேன் என கூறிவிட்டார். மேலும், வந்திருப்பவர்களிடத்தில் தமிழில், எல்லாருக்கும் வணக்கம், உங்களை எல்லாம் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், எனக்காக இங்க வந்து இருக்கீங்க, எப்படி உங்க எல்லாருக்கும் நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.. மிக்க நன்றி என தெரிவித்தார்.

பின்னர் ராஷ்மிகாவை பற்றி பேசிய நடிகர் தனுஷ், சேகர் கமுலா இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவங்களை கொடுத்ததோடு சில மோசமான அனுபவத்தையும் கொடுத்தது. ஏனெனில், எனக்கும் ராஷ்மிகாவுக்கும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாக குப்பைத்தொட்டியில் இருந்தபடியே சூட்டை நடத்தினார். அப்பொழுது திடீரென ராஷ்மிகாவை பார்த்து.. என்னங்க..? இப்படி நாற்றம் அடிக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர், என்ன நாற்றம் அடிக்கிறதா..! எனக்கு எதுவுமே அடிக்கவில்லையே சார் என்று கூறினார். அதனைக் கேட்ட உடனே எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது... உண்மையிலேயே இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்" என தெரிவித்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவை பற்றி நடிகர் தனுஷ் கூறும் பொழுது அவர் வெட்கப்பட்டு சொல்ல வேண்டாம் என தடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா... Proud Parents ஆக மாறிய நெகிழ்ச்சி தருணம்!!