தமிழில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, மழை, தாஸ், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், இதய திருடன், தீபாவளி, வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், கோ, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியெட், தனி ஒருவன், சகலகலா வல்லவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், அடங்க மறு, டிக் டிக் டிக், தும்பா, கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன் (PS 1), இறைவன், அகிலன், பொன்னியின் செல்வன் 2, சைரன், பிரதர், தக் லைஃப், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரவிமோகன்.

இத்தனை படத்தில் நடித்த ரவி மோகனுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும் தனக்கு முதல் ரசிகையாக தனது மனைவி ஆர்த்தி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் ஆர்த்தியோ எல்லா விஷயத்திலும் அவரது அம்மாவையே முன் வைக்கிறார். தன்னை அவமானப்படுத்துகிறார் என குற்றம் சாட்டி விவாகரத்து செய்ய முன்வந்து நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவ, அதனை பாடகியும் அப்பொழுது மறுத்தார். ஆனால், தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்து நிற்க அது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
இதையும் படிங்க: இவனுங்க வெளியே இருந்தா ஊரையே கெடுப்பானுங்க...! பொள்ளாச்சி தீர்ப்பு.. குஷ்பூ கட்டமான பதிவு..!

இதனை அடுத்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, ஒரு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகமே நாங்கள் பிரிய என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டிருக்கும். என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டு கொள்கிறேன். சட்டப்படி, எனக்கும் ரவி மோகனுக்கும் விவாகரத்து ஆகவில்லை. ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்று உள்ளார். எந்த பண உதவியும் இல்லாமல் நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து பேங்க் மூலமாக எங்களை காலி செய்ய வைத்துள்ளார் ரவி " என தெரிவித்து இருந்தார்.

இதனால் அனைவரும் பாடகி கெனிஷாவை பற்றி அவதூறாக பேச, டென்ஷானான அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஆர்த்தி ரவிக்கு பதில் கொடுத்தார். அதில் "ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வர்" என தெரிவித்திருந்தார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த ஆர்த்தி அதனை வெளியே காண்பித்து கொள்ளாமல் தனது மகன்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள பல இடங்களுக்கு அழைத்து சென்று வருகிறார்.

இதனை பார்த்து கடுப்பான நடிகை குஷ்பூ, பெண் என்றால் உங்களுக்கு சும்மாவா..கட்டிய மனைவியாகவும் பெற்ற அம்மாவாகவும் ஆர்த்திரவி படும் துயரம் எனக்கு புரிகிறது என சொல்லி ஒரு சிங்கத்தின் அரவணைப்பில் இரண்டு குட்டிகள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதன்கீழ், " உடைந்த வாக்குறுதிகளின் எதிரொலியில், அவள் தன் மதிப்பை கேள்விக்குள்ளாக்குகிறாள், அவள் தன்னை சந்தேகிப்பதால் அல்ல, மாறாக அவள் அதிகம் நம்பியவர் விலகிச் சென்றதால்.
அவளுடைய நேர்மை, வலிமையின் தூண், இப்போது துரோகத்தின் எடையின் கீழ் நிழலாடுகிறது. காயம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உணரப்படும்போது நீங்கள் எப்படி குணமடைவீர்கள்? அவளுடைய அர்ப்பணிப்பு அவளுடைய பிணைப்பு, அவளுடைய உலகம், ஆனால் அதைப் போற்றுவதாக சபதம் செய்தவரால் அது சோதிக்கப்படுகிறது. மௌனம் வார்த்தைகளை விட சத்தமாக அலறுகிறது, ஆனாலும் அவள் முன்னோக்கி நகர்கிறாள், இதயத்தை தன் கைகளில் வைத்துக் கொண்டு, அவள் மட்டுமே உள்ளே காணக்கூடிய ஒளியைத் தேடுகிறாள்.

நினைவில் கொள்ளுங்கள், துன்பங்களிலிருந்து வலிமையான ஆன்மாக்கள் வெளிப்பட்டன. அது மிகப் பெரிய கதாபாத்திரங்கள் வடுக்கள் நிறைந்தவை" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாடகியை கரம் பிடித்த ரவிமோகன்..! சக்காளத்தி சண்டையை ஆரம்பித்த ஆர்த்தி..!