தமிழ் திரையுலகில் தனது வசீகரிக்கும் குரலால் அனைவரையும் தனது உள்ளங்கையில் வைத்திருந்தவர் தான் பாடகி சின்மயி. இவரது குரல்களுக்கு அடிபணியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த வகையில் அழகான குரலை வைத்திருக்கும் பாடகி சின்மயி, 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற அழகான பாடலை பாடி திரையுலகில் அறிமுகமானார். இதனை அடுத்து 'என்னோடு நீ இருந்தால், மன்னிப்பாயா, வாகை சூடவா திரைப்படத்தில் வரும் சரசர சார காத்து வீசும் போது' முதலான பாடல்களைப் பாடி ஹிட் பாடகையாக வலம் வந்தவர்.

இப்படி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பாடல்களைப் பாடுவதோடு மட்டுமல்லாமல் பின்னணியில் டப்பிங் குரல்களும் கொடுத்து பிரபலமாக வலம் வந்த சின்மயி, சமீபத்தில் '#மெட்டோ' என்ற செயலியில், ஏராளமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலில் கொடுமைகளை பற்றி தெரிவித்து வந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலில் தொந்தரவுகளை குறித்து பாடகி சின்மயியும் அதில் பகிரங்கமாக தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுகளை பார்த்து பலர் அவருக்கு ஆதரவு குரல்களை கொடுத்து வந்தாலும், மறுபக்கம் வேண்டுமென்றே அவர் கவிஞர் வைரமுத்துவின் மீது பழி போடுகிறார் என்று தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: 'முத்த மழை' பாடல் பாடி ரசிகர்களின் அன்பு மழையில் நனையும் பாடகி சின்மயி..! தடைகளை நீக்க வலுக்கும் ஆதரவு குரல்கள்..!

அதுமட்டுமில்லாமல் அதற்குப் பின்பு அவருக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் திரை உலகில் குறைந்து வர, நடிகர் ராதாரவி உத்தரவின் பெயரில் தொலைக்காட்சி மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தை கூறி அதிலிருந்து பாடகி சின்மையை வெளியேற்றினார். இதனால் அவருடைய பல வாய்ப்புகள் அவரை விட்டுக் கடந்து சென்றாலும் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை சரி வர பயன்படுத்தி வந்தார் பாடகி சின்மயி.

அதன் விளைவாகவே யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். இப்படி இருக்க, தற்பொழுது கர்நாடகாவில் மொழி பிரச்சனையை தூண்டி விஸ்வரூபம் எடுத்துள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் திடீரென தோன்றிய பாடகி சின்மயி, "முத்த மழை " என்ற பாடலை தனது வசீகரிக்கும் குரலால் பாட, அங்கிருந்த ரசிகர்கள் முதல் பல பிரபலங்கள் வரை அவருடைய பாடலுக்கு மயங்கி இருக்கும் இந்த வேளையில் அவர் மீதான தடைகளை களைத்து அவரை மீண்டும் பாட வைக்க வேண்டும் என்ற ஆதரவு குரல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இந்த நிலையில், தனது மனகுமுறலை ஃபேஸ்புக் செயலி மூலம் பகிர்ந்து இருக்கிறார் பாடகி சின்மயி. அவரது பதிவில், "கடந்த சில வருடங்களாக நான் அனுபவித்த மோசமான வார்த்தைகள், அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர் என்று அழைக்கப்படுவது, விபச்சாரி, 'சரிசெய்து கொண்ட' ஒரு பெண் மற்றும் பலவற்றையும், எல்லாப் புகழையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். நான் அனைத்து ஆதரவையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும், கடந்த சில நாட்களாக நான் எதிர்கொள்ளும் இந்த ஆதரவையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவிற்கும் பதிலடி கொடுக்கட்டும், மேலும் அனைத்து உயிர் பிழைத்தவர்களும் நிரூபிக்கப்பட்டு இப்போது நான் காணும் ஆதரவைப் பெறட்டும். உண்மை வெல்லட்டும்" என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவானது தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் சினிமாவை விட்டு போனால் என்ன அவர் படம் இருக்கே.. தற்போது ரீரிலீஸ் லிஸ்டில் குஷி, சிவகாசி..!