கர்நாடக மக்கள் நடிகர் கமலஹாசன் மீது வைத்த கோபத்தை விட தற்பொழுது அவர் நடித்த படத்தைப் பார்த்து தமிழ் மக்களே மிகவும் கடுப்பில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ட்ரெய்லரை பார்த்து ஆதங்கப்பட்ட பல ரசிகர்கள், நடிகர் சிம்பு பேசிய ஒற்றை வசனமான நான் தான் இனி எல்லாமே என்ற டயலாக்குகளில் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று படத்தை பார்க்க சென்று அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு வெளியே எப்பொழுது தான் வருவோம் என்ற திக் திக் மொமென்டை கொடுத்துள்ளது கமலஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம். இத்திரைப்படத்தை குறித்து சில ரசிகர்கள் கூறும் பொழுது இது தக்கலைப் படம் அல்ல தற்கொலை செய்து கொள்ளக்கூடிய படம் எனவும் கிண்டல் அடித்து செல்கின்றனர்.

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வி அடைந்த நேரத்தில் இந்த தக்லைப் திரைப்படமாவது அவருக்கு மாபெரும் வெற்றி கொடுக்கும் என பார்த்தால் அதுவும் அவருக்கு கை கூடவில்லை என்பதே வருத்தமாக உள்ளது என அவரது ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்பொழுது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவுடன் சேர்த்து, தனது சொத்து விவரங்களையும் முழுமையாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு என பார்த்தல் ரூ.59.60 கோடி. அதேபோல் அசையா சொத்துகளின் மதிப்பு என பார்த்தால் ரூ.245.86 கோடி. இதில் அவருக்கு கடன் மட்டும் ரூ.49.67 கோடி இருப்பதாக அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பயணத்திற்காக, பென்ஸ், BMW, லக்சஸ், மகேந்திரா பொலிரோ ஆகிய நான்கு கார்கள் தன்னிடம் இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தக் லைஃப்' படம் இன்னும் பாக்கலையா.. பாதி "ஜில்லா" பாதி "செக்க சிவந்த வானம்".. படம் அப்படி இருக்கு..!

இந்த சூழலில் அனைவரது கோபத்தையும் பெற்ற, மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிம்பு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் தக் லைஃப். இத்திரைப்படத்தை பார்த்த மீசை ராஜேந்திரன் பேசுகையில், "தக் லைஃப் திரைப்படத்தை என்றைக்குமே 'நாயகன்' திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பேசவே கூடாது. காரணம் 37 வருடங்களுக்கு முன்பாக வெளியான அந்த திரைப்படம் பழைய படமாகவே இருந்தாலும் இப்பொழுதும் அந்தப் படத்திற்கு ஈடு இணையே கிடையாது. அதுமட்டுமல்லாமல் நடிகர் கமலஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் காம்போவில் உருவான இத்திரைப்படத்தை இன்று மணிரத்தினமே நினைத்தால் கூட இப்படி ஒரு காவியத்தை இயக்கவே முடியாது.

இப்படி இருக்க, எதற்காக மணிரத்தினம் இப்படி ஒரு கதையை வைத்து படம் எடுத்தார் என எனக்கு இன்றும் புரியவில்லை. ஏனெனில் கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணி என்று நினைக்கும்பொழுது இந்த படம் அபாரமாக இருக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டுதான் தியேட்டருக்கு சென்றனர் ஆனால் வெளியில் வரும் பொழுது அத்தனையும் புஸ்வானம் ஆகிவிட்டது. இருப்பினும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் கமலஹாசன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் ஏனோதானோ என நடிக்காமல் வாழ்ந்து இருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவுகளும் நம்மை ரசிக்க வைப்பதாகவே இருக்கிறது. இத்திரைப்படத்தின் கதையை சற்று திரும்பி பார்த்தால் அது முற்றிலுமாக கலாச்சாரத்தையே கெடுக்கும் வகையில் இருக்கிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் எடுத்து வளர்த்த மகன்தான் நடிகர் சிம்பு. இப்படி இருக்க, எப்படி நாயகன் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனின் ரெட் லைட் ஏரியா சீன் வருமோ அதே போலத்தான் இத்திரைப்படத்திலும் நடிகை திரிஷாவை ரெட் லைட் ஏரியாவில் இருந்து அழைத்து வந்து தனக்கு மனைவியாக அந்தஸ்தை கொடுத்து அவருடன் வாழ்ந்து வருகிறார் கமல். ஆனால் நாசரின் பிளான் படி கமலஹாசனை சிம்பு மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கிறார். அதன் பின்பு, கமலஹாசன் இறந்துவிட்டார் என நினைத்த சிம்பு, தனக்குத் தாயாக இருக்கும் த்ரிஷாவிடமே அசிங்கமாக நடந்து கொள்வதை எல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நாடு கெட்டுக் கிடக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு காட்சிகளை எல்லாம் நீங்களே முன்னுதாரணப்படுத்தினால் பின்வரும் சந்ததிகள் என்ன செய்வார்கள்.

நடிகர் கமலஹாசன் தனது இளம் வயதிலிருந்து பல 'ப்பிளே பாய்' காண கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும், இதற்கு மேல் அதனை குறைத்துக் கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும். இனி நீங்கள் முத்த காட்சிகள் காதல், காட்சிகள் என்பதையெல்லாம் தவிர்த்து விட்டு உங்கள் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தால் உங்களுக்கு என்றும் ரசிகர்கள் கைத்தட்டல்களை அள்ளிக் கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் கமலை வைத்து இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டுமென மணிரத்தினம் எப்படி நினைத்தார் என எனக்கும் புரியவில்லை. அவர் நாயகன் திரைப்படத்தை போல எடுக்க நினைத்தார் ஆனால் இந்த படம் நாயகன் திரைப்படத்தை போல் இல்லாமல் கதை எங்கெங்கோ செல்கிறது. அதுமட்டுமல்லாமல் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் மனைவிகளை வைத்து விளையாடுவது எல்லாம் மிகவும் மோசமாக இருக்கிறது.

படத்தின் பட்ஜெட்டுகள் ரூ.300 கோடி என்று சொல்வதெல்லாம் நம்ப முடியாது. அந்த அளவிற்கு படத்தில் ஒன்றும் பெரியதாக இல்லை" என காட்டமாக பேசியிருக்கிறார் மீசை ராஜேந்திரன்.
இதையும் படிங்க: 'தக் லைஃப்' படத்துக்கு ரேட்டிங் வந்தாச்சு..! First விமர்சனமே Best விமர்சனமா வந்துடுச்சே..!