காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.

மேலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை குறித்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கூட ஓடமுடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த இடத்தை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் மட்டுமே அதிகம் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். கார்களிலோ அல்லது கனரக வாகனங்களிலோ செல்ல முடியாது. இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இதையும் படிங்க: "ஒரே தாக்குதலில் ஜீரோவான பயங்கரவாத அமைப்புகள்"..! நடிகை கங்கனா அசத்தல் பதிவு..!

இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போருக்கு தயாராகி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருந்தது. மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல கூடிய நீர் முதல் போக்குவரத்து வரை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல் பாகிஸ்தானிலும் வான்வழி பயணங்களில் இந்தியாவிற்கு தடைவிதித்துள்ளது. இனி எந்த பேச்சுவார்த்தையும் அல்ல, இந்தியா அடித்தால் திருப்பி அடிப்போம் என பாகிஸ்தானும் எதிர்த்து நின்றது. எனவே உலகநாடுகள் அனைத்தும் இந்த பிரச்சனையை உற்றுநோக்கி கவனித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் இந்தியா தனது முதல் அடியை பாகிஸ்தானுக்கு எதிராக கொடுத்துள்ளது.

அதன்படி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய ராணுவம் தரப்பில் பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலை குறித்து பார்த்தால், பிரிசிசியன் ஸ்டிரைக் என்று அழைக்கிறார்கள். என்னவெனில் இப்படிப்பட்டதான தாக்குதலில் முதலில் எதிரிகளின் இலக்குகள் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுமாம். பின்பு தரை வழியாக தாக்குதல் நடத்தினால் எப்படி சாத்தியயம். அல்லது வான்வழி தாக்குதல் நடத்த சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை முதலில் வகுக்குமாம். பின்பு தான் தாக்க செல்வார்களாம்.

அதன்படி பார்த்ததால், இந்தியா தனது இலக்கை பொறுமையாக ஆராய்ந்து, அதனை உறுதி செய்த பின்னரே இங்கு இருந்தவாறு பயங்கரவாத அமைப்புகளை தாக்கி அழித்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் பிரதமரின் ஒப்புதலுக்கு பின் தான் வீரர்களுக்கே இந்த தாக்குதல் குறித்து சொல்லப்பட்டு பின் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவின் தாக்குதலுக்கு தனது எக்ஸ் தளவாயிலாக பாராட்டை தெரிவித்துள்ளார். அதன்படி, "நீதி நிலைநாட்டப்பட்டது.. ஜெய்ஹிந்த்" என பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: "சவால் விட்டால் கடைசியில் இதுதான் நிலைமை"..! தீவிரவாத அமைப்புக்கு மோகன்லால் காட்டமான பதிவு..!