இந்திய திரையுலகில், சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் மம்முட்டி. இப்படி இருக்க, மம்மூட்டியின் உண்மையான பெயர் 'முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்'. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. இப்படி இருக்க, திரையுலகில் இவரது ஆரம்ப வாழ்க்கை 1971ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற படத்தின் மூலம் தொடங்கியது. அதன் பின், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகருக்கு மேளா, வில்லனுண்டு ஸ்வப்னங்கள் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், 80களில் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்து, 90களில் பூதக்கண்ணடி, டாக்டர்.பாபாசாஹத் அம்பேத்கர், பொந்தன் மட மற்றும் விதேயன் போன்ற மலையாள படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார்.

இப்படி இருக்க, 1990ம் ஆண்டு, கே.மது இயக்கிய "மௌனம் சம்மதம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்", இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "தளபதி", இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் "கிளிப்பேச்சு கேக்கவா", என்.லிங்குசாமி இயக்கத்தில் "ஆனந்தம்" மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின் தெலுங்கில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு "சுவாதி கிரணத்தில்" நடித்தார்.
இதையும் படிங்க: சட்டம் தன் கடமையை செய்யும்.. பாடகி கெனிஷா வெளியிட்ட பகீர் அறிக்கை..! சரண்டரான நெட்டிசன்கள்..!

இந்த சூழலில், 73 வயதான மம்மூட்டி சமீபத்தில், மகேஷ் நாராயணன் இயக்கி வரும் "MMMN" என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சமீபகாலமாக இடைவெளி எடுத்துள்ளார் நடிகர் மம்மூட்டி. இதனை அறிந்த சிலர், மம்முட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டிப்பாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இதுவரை அதற்கு எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் இருக்கிறார் நடிகர் மம்முட்டி.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான மணியன்பிள்ளை ராஜு, தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் புற்றுநோயுடன் தனது போராட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், நான் மிகவும் வேதனை பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நடிகர் மம்முட்டியிடம் மட்டுமே இதனை பகிர்ந்து கொண்டேன். உடனே அவர் " நீ இந்த நோயுடன் போராடி நிச்சயம் மீண்டு வருவாய் நாம் 200 ஆண்டுகள் எல்லாம் வாழ முடியாது ஆனால் அவ்வளவு ஆண்டுகள் வாழ்வதற்காகவும் நாம் இங்கு வரவில்லை, ஆனால் நீ போராடி ஆரோக்கியமாக திரும்ப வேண்டும்" என்றார்,

அந்த அறிவுரை எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. இருப்பினும் நான் மரண படுக்கையில் இருந்த பொழுது மம்முட்டியும் மோகன்லாலும் என்னை வந்து சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நலம் விசாரித்து சென்றனர். அவர்கள் இருவரது பிஸியான நேரத்தை எனக்கு ஒதுக்கி கொடுத்தார்கள்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நக்கல்யா உனக்கு.. ஒரே இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஆர்த்தியை சூடேற்றிய ரவி மோகன்..!