பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர்.

ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து முடித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில்' ஸ்டிரிக்ட் ஆபிசர்கள் மத்தியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
இதையும் படிங்க: கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்..! நீல நிற சேலையில் அழகிய லுக் போட்டோஸ்..!

பின் வடிவழகியாக அவதாரம் எடுத்த ரகுல் பல போட்டிகளில் கலந்து வெற்றிகளை குவித்து, அதன் பின், சினிமாவில் நடிக்க வந்தார்.

இப்படி தனது வாழ்க்கை முழுவதையும் ஸ்டிக்ட்டாக கழித்த ரகுல், ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பிறகு பல இடங்களுக்கு அவருடன் சென்று தனது வாழ்க்கையை இன்பமாக கழித்து வருகிறார்.

இதுவரை, மகிழ்திருமேனி இயக்கத்தில் 'தடையறத் தாக்க', ரவி தியாகராஜன் இயக்கத்தில் 'என்னமோ ஏதோ', ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் 'பிரம்மோற்சவம்', ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்', ஹச் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று'...

ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் 'தேவ்', செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', ரவிக்குமார் ஆர் இயக்கத்தில் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

அதுமட்டுமல்லாமல், ரகுல் பிரித் சிங் தனது காதல் ஜோடியான ஜாக்கி பக்னானியை எங்கு அழைத்து சென்றாலும் கைகளை கோர்த்து கொண்டும்,

கட்டி அனைத்தபடியும், முத்தம் கொடுத்து அன்பை பகிர்வதும், நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பதும் என பிசியாக தனது வாழக்கையை கழித்து வருவதுடன்

அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பல இளசுகளின் இதயத்தை கொள்ளை கொண்டு வருகிறார்.

இப்படி தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வரும் ரகுல், அவ்வப்போது தனது ஜோடியுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலரது புகைச்சலுக்கு ஆளாகி வருவார்.

ஆனால் இன்று அவரது கணவருக்காக முத்துக்களால் உருவாக்கப்பட்ட உடையை அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதையும் படிங்க: மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்..! "பராசக்தி" படப்பிடிப்பின் போது சுவாரஸ்யம்..!