தமிழ் திரையுலகில் 'உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொற பொண்ணு' என்ற பாடலை இன்று கேட்டாலும் அனைவரது நினைவிற்கு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தில் அழகாக வந்த கீர்த்தி சுரேஷை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதில் 'ஓய் செல்பி' என சொல்வதும், ஃப்ரபோஸ் செய்யும் சீன்களில் எல்லாம் அவ்வளவு அழகை வெளிப்படுத்தி காண்பித்து இருப்பார் கீர்த்தி. இதனாலேயே அவரை பலருக்கும் பிடித்திருக்கிறது.

இப்படி தமிழ் திரையுலகில், விஜய், ரஜினி, விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம், என பல முன்னனி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் வாழ்ந்து வருபவர். அதனால் தான் நடிப்பு என்பது அவருக்கு அசாத்தியமான ஒன்றாக இருக்கிறது. அதன்படி, தமிழ் திரையுலகில் குழந்தை நட்சித்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ், பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து தற்பொழுது பாலிவுட்டிலும் நடித்து வந்தாலும் இன்னும் அந்த குழந்தை முகமும் குழந்தை தனமான சிரிப்பும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார்.
இதையும் படிங்க: அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்..! பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரல்..!

குழந்தையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இதுவரை, இது என்ன மாயம், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், பாம்பு சட்டை, பைரவா, சண்டக்கோழி 2, சீமராஜா, சாமி 2, சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், மிஸ் இந்தியா, பெண்குயின், மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், அண்ணாத்த, சாணிக் காயிதம், குட் லக் சகி, மாமன்னன், சைரன், ரகு தாத்தா, கல்கி 2898 AD போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்னும் கண்ணிவெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

இப்படிப்பட்ட கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின்பு எந்தவித படங்களிலும் நடிக்க போவதில்லை என பலரும் விமர்சித்து வரும் இந்த வேளையில், திருமணத்திற்கு பின்பு மீண்டும் தனது சினிமாவின் அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த வகையில், தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில்,

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே.சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தான் " ரிவால்வர் ரீட்டா". வருடமே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் தற்பொழுது இப்படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் இப்படத்தின்மீதுள்ள எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆகவே இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஒரு வழியாக வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வருகிறது என்ற இனிப்பான செய்தியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான டீசரையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: குபேரா படத்தின் கதை லீக் ஆனதால் டென்க்ஷனில் படக்குழு..! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..!