தற்பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கும் காமெடி கதாநாயகர்களுக்கும் பஞ்சங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பழைய நடிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாராக மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் 'ஜனநாயகன்' திரைப்படத்தை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார்.

மேலும் நடிகர் அஜித் கார் ரேஸ்ஸில் ஈடுபடும் பொழுது படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி சென்றிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனும் தற்பொழுது திமுகவில் ராஜ்யசபா செல்வதற்காக தனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதேபோல் காமெடியில் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்த சந்தானம், சூரி, யோகி பாபு என பலரும் கதாநாயகர்களாக மாறியிருக்கின்றனர். இப்படி இருக்க, பல இயக்குனர்களும் தற்பொழுது மற்றவர்கள் படத்தில் நடிக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். வில்லன்கள் அனைவரும் காமெடி நடிகர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர். காமெடியன்களாக இருந்தவர்கள் அனைவரும் கதாநாயகர்களாக மாறி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களின் ஹைப்பை எகிறவிட்ட சசிகுமாரின் அடுத்த படம்..! true story என்பதால் மக்கள் கொண்டாட்டம்..!

ஆனால் கதாநாயகங்கள் அனைவரும் தற்போது ஓய்வு பெற்று சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு பஞ்சங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் தனது துப்பாக்கியை கொடுத்து விட்டு சென்ற விஜய்க்கு பின்பு சிவகார்த்திகேயன் தான் மாஸ் லீடாக தமிழ் சினிமாவில் இனி இருப்பார் என அனைவரும் நினைத்து கொண்டு இருக்க, தற்பொழுது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலமாக அதிரடி கதாநாயகனாக மக்கள் மனதில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் சிவகுமார்.

இத்திரைப்படத்தில், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ராமேஸ்வரம் கடல் வழியாக தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்த நடிகர் சசிகுமார், தனது குணத்தால் அங்கு இருக்கும் அனைவரையும் மாற்றுகின்ற ஒரு கேரக்டராக இப்படத்தில் வாழ்ந்து இருப்பார். அவருடன் நடிகை சிம்ரன் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். இப்படிப்பட்ட ஒரு அருமையான திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சசிகுமார் எந்த திரைப்படத்தில் நடிப்பார் அவருடைய அடுத்த திரைப்படங்கள் எப்படி இருக்கும்?

இப்பொழுது உங்களுக்கு மவுஸ் அதிகமாக இருப்பதால் சம்பளங்களை அதிகமாக உயர்த்துவீர்களா? என்ற பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் அவரிடம் முன்வைத்த பொழுது, நான் என்றும் அதே சசிகுமார் தான், என் வாழ்க்கையிலும் எனது கெரியரிலும் ஏற்றத்தாழ்வுகள் பல வந்தாலும் நான் நானாகவே இருக்க விருப்பப்படுகிறேன். ஆதலால் ஒரு பொழுதும் என்னுடைய சம்பளத்தை நான் ஏற்ற போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இப்படி இருக்க நடிகர் சசிகுமாரின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என மக்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அவர் 'ஃப்ரீடம்' என்ற திரைப்படத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, விஜய் கணபதி பிக்சர்ஸ் மற்றும் பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் பார்த்தால் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சத்திய சிவா இயக்கத்தில் உருவான 'ஃப்ரீடம்' திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாகவும், ஜெய் பீம் திரைப்படத்தில் ராசப்பனுக்கு மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படி இருக்க, இத்திரைப்படத்தின் டீசரை நடிகர் கார்த்திக் வெளியிட்டார்.

அந்த டீசரை பார்க்கும் பொழுது இலங்கையில் இருந்து வந்த மக்களுக்கு ஏற்படும் கொடூரங்களை காண்பிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் நடிகர் சசிகுமாருக்கும் போலீசுக்கும் இடையே ஏற்படும் மிகப்பெரிய போராட்டத்தை காண்பிக்கும் வகையில் இத்திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் அனைவரையும் நரகத்திற்கு கொண்டு செல்லலாம் என்ற ஒரு வாக்கியத்தை கேட்ட கதாநாயகி ஜோல் இங்கு நடப்பதை விடவா வேற நரகம் ஒன்று தேவை எனக் கூறும் டயலாக்குகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக இந்த படம் ஜெய் பீம் திரைப்படத்தை போலவும் அதிரடியான ஆக்சன் கலந்த நிஜ கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாகவும் இருப்பதால் மக்கள் இப்படத்தை காண ஆர்வமாக உள்ளனர்.

மேலும் இலங்கை மக்களுக்கு எதிரான அடக்கு முறையை சரி செய்ய ஈழத் தமிழர்கள் இறங்கி போராடும் திரைப்படமாக இப்படம் காணப்படுகிறது.
இதையும் படிங்க: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!