துணை கதாபாத்திர நடிகர்கள் வரிசையில் இருந்து வளர்ந்தவர்கள் லிஸ்டில் இன்று, நடிகர் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரை குறிப்பிடும் பொழுது நடிகர் விமல்(லை) என்றும் மறக்க முடியாது. தனது ஆரம்ப காலத்தில், கில்லி, கிரீடம், குருவி உள்ளிட்ட பல படங்களில் கண்ணுக்குத் தெரியாத துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படி பல வருடங்களாக துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த விமலின் நடிப்பு திறமையை பார்த்த பாண்டிராஜ் கடந்த 2009 ஆண்டு இயக்கிய "பசங்க" படத்தில் விமலுக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.அதில் மீனாட்சிசுந்தரம் என்ற காப்பீட்டு முகவர் கதாபாத்திரத்தில் தனது வாழ்க்கையில் தொழில் தொடங்கி முன்னேறி இருப்பதை போல் கதையை உருவாக்கி இருப்பார்.
இதையும் படிங்க: ரசிகர்களின் ஹைப்பை எகிறவிட்ட சசிகுமாரின் அடுத்த படம்..! true story என்பதால் மக்கள் கொண்டாட்டம்..!

இதனைத் தொடர்ந்து ஓவியாவுடன் களவாணி, தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூன்று பேர் மூன்று கடல், தேசிங்கு ராஜா , புலிவால், மாப்பிள்ளை சிங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார். நடிகர் சிவகார்த்திகேயனும் இவரும் நடித்த கேடிபில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தையும், வாகை சூடவா திரைப்படத்தையும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாத படமாக உள்ளது. விமலின் சிறந்த காமெடி படம் என்று சொன்னால் அது களவாணி மற்றும் கலகலப்பு இரண்டுமே.

சில நாட்களாக நடிகர் விமலின் எந்த ஒரு திரைப்படமும் வெளியிடப்படாத நிலையில், பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'தமிழ் குடிமகன்' என்ற திரைப்படத்தின் இயக்குநரான 'இசக்கி கார்வண்ணன்' இயக்கத்தில், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிகர் விமலும் "பரமசிவன் பாத்திமா" திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும், மதம் மாறாத இந்துக்களுக்கும் இடையிலான மோதலை காதல் வைத்து சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படம் கிறிஸ்தவ மக்களை புண்படுத்துவதாக இருப்பதாகவும் ஏற்கனவே இது குறித்து புகார் வந்துள்ள நிலையில் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்து விட்டது. இதனை அடுத்து, தயாரிப்பு நிறுவனம் சாரிப்பில் இப்படம் மறு தணிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், தற்பொழுது படத்தைப் பார்த்த மறு தணிக்கை குழுவினர் ஒரு சில காட்சிகள் வசனங்களை கண்டிப்பாக நீக்க வேண்டும் என சொல்லி "பரமசிவன் பாத்திமா" திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வருகிற ஜூன் 6ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா மக்கள் பாக்க வராங்கய்யா.. வருங்கால இயக்குநர்களுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த டிப்ஸ்..!