பிரபல இந்திய பின்னணிப் பாடகியான சின்மயி ஸ்ரீபதா, கடந்த 2002ம் ஆண்டு வெளியான கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை பாடி, அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சின்மயி குரலில் உருவான இந்த பாடல் இன்றும் மக்களின் எவர்கிரீன் பாடலாக உள்ளது. இவர் தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு, ஹிந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் இவர் ஒரு பாடகியாக மட்டுமில்லாமல், நடிகை, டப்பிங் கலைஞர், தொழில்முனைவோர் என பல துறைகளில் அசத்தினார். யே மாயா செசாவே படத்தில் சமந்தாவிற்கும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவிற்கும், பாகுபலி படத்தில் அனுஷ்கா ஷெட்டிக்கும் குரல் கொடுத்தவர் சின்மயி.
இதையும் படிங்க: அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்..! பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரல்..!
இப்படி தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சின்மயிக்கு, கடந்த 2018ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது. இதற்கு கவிஞர் வைரமுத்து மீது சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. 2018ஆம் ஆண்டு #MeToo இயக்கத்தின் ஒரு பகுதியாக, சின்மயி வைரமுத்து மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் 2005-2006இல் சுவிட்ஸர்லாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஒத்துழைப்பு இல்லையெனில் தொழிலில் தடை ஏற்படும் என மிரட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, 17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்து மீது ஒத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மேலும் ஆண்டு சந்தா செலுத்தாததை காரணமாகக் கூறி, சின்மயி மீது டப்பிங் யூனியனில் இருந்து தடை விதிக்கப்பட்டது. ஆனால், சின்மயி இதற்கு உண்மையான காரணம் தனது #MeToo குற்றச்சாட்டுகள் தான் என்று தெரிவித்தார். இதனால் சின்மயிக்கு தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்ததால், அவர் மற்ற மொழிகளில் பாடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய “முத்த மழை” பாடல் யூடியூபில் 75 லட்சம் பார்வைகளை கடந்து வைரலானது. இது மீண்டும் அவரது தடை குறித்த விவாதங்களை தூண்டியது. பாடகி தீ பாடிய ஒரிஜினல் வெர்ஷனை விட, சின்மயி பாடியது நன்றாக இருந்ததாக இணையத்தில் விவாதங்கள் எழுந்தது.

மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சின்மயியின் திறமையை பாராட்டி, தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, சின்மயியை தனது வரவிருக்கும் படங்களில் பாட வைப்பதாக உறுதியளித்தார்.

சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது டி இமான் சின்மயியை தனது படத்தில் பாட வைத்துள்ளார். கே.எஸ். அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாட சின்மயிக்கு இசையமைப்பாளர் டி. இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "என்றும் ஆன்மாவைத் தொடும் சின்மயியின் குரலில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன். என் மனதிற்கு நெருக்கமான ஒரு மெல்லிசைப் பாடல்" என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சின்மயி ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி செய்யும் நடிகை ஷாக்ஷி அகர்வால்..! ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்..!