• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தனது வலையில் விழுந்த தொழிலதிபர்கள்.. ஆசை காட்டி மோசம் செய்த நடிகை..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!

    சீரியல் நடிகை, தொழிலதிபர்களை ஆசை காட்டி மோசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Bala Mon, 29 Dec 2025 12:25:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-Businessman-robbed-of-money-tamilcinema

    தமிழ் சின்னத்திரை உலகில் வில்லி கதாபாத்திரங்களில் தனித்துவமான நடிப்பால் அறியப்பட்ட நடிகை ராணி, தற்போது ஒரு மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த ஒரு நடிகை மீது இப்படியான குற்றச்சாட்டு எழுந்திருப்பது, சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக நடிகை ராணி, ஆந்திராவில் பிறந்தாலும், தனது சிறுவயதிலிருந்தே சென்னையில் வளர்ந்தவர். இவரது தந்தை சினிமா துறையில் பணியாற்றி வந்ததால், சிறு வயதிலேயே திரையுலகத்தின் சூழலை நன்கு அறிந்தவர். இதன் காரணமாக, குழந்தை நட்சத்திரமாகவே தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாக, 50-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் சைல்டு ஆர்டிஸ்டாக நடித்துள்ள ராணி, அந்தக் காலகட்டத்திலேயே திரையுலகில் ஒரு முகமாக அறியப்பட்டார்.

    சிறுவயதில் தொடர்ந்து நடித்திருந்தாலும், படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார். இப்படி இருக்க தனது படிப்பை முடித்த பிறகு, குடும்பத்தின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு, நீண்ட காலம் திரையுலகத்திலிருந்து முற்றிலும் விலகியே இருந்தார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் நடிப்புலகிற்கு திரும்புவார் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, தெலுங்கு சீரியல்கள் மூலம் அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

    இதையும் படிங்க: கல்யாணம் பண்ண ஆசை.. ஆனால் செய்யாமல் இருப்பதற்கு பின் இப்படி ஒரு காரணமா..! நடிகர் பிரபாஸ் கொடுத்த விளக்கம்..!

    actress rani

    அந்த ரீ-என்ட்ரி, அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸாக அமைந்தது. மேலும் தமிழில், ‘சிகரம்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிகை ராணி அறிமுகமானார். அதன் பின்னர், ‘அலைகள்’, ‘சொந்தம்’, ‘அத்திப் பூக்கள்’, ‘வள்ளி’ உள்ளிட்ட பல பிரபல தொடர்களில் நடித்தார். குறிப்பாக, வில்லி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, ரசிகர்களிடையே அவரை ஒரு வில்லி ஸ்பெஷலிஸ்டாக அடையாளப்படுத்தியது. அவரது கண்கள், உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை வில்லி வேடங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மத்தியில் அவர் தேடப்படும் நடிகையாக மாறினார்.

    இந்த நிலையில், நடிகை ராணியைச் சுற்றி தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரூரைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் தொழிலதிபருடன், நடிகை ராணி கடந்த சில காலமாக நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பழக்கத்தின் அடிப்படையில், தொழிலதிபரிடம் இருந்த பணமும், நகைகளும் நடிகை ராணி பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், நட்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்த பணம் மற்றும் நகைகள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருப்பி அளிக்கப்படும் என தொழிலதிபர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், பல மாதங்கள் கடந்தும் பணமும் நகைகளும் திருப்பி வழங்கப்படாததால், தொழிலதிபர் நடிகை ராணியை தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். இதற்கு நடிகை ராணி சரியான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியதாகவும், பின்னர் முற்றிலும் தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஏமாற்றப்பட்டதாகக் கூறி, அந்த தொழிலதிபர் கரூர் காவல் நிலையத்தில் நடிகை ராணி மீது அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

    actress rani

    புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய கரூர் போலீசார், நடிகை ராணியை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்த முயன்ற போது, அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. அப்போது தான் நடிகை ராணி தலைமறைவாகியிருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதன் பின்னர், போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கி, நடிகை ராணியை தேடி வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த வழக்கில் நடிகை ராணி மட்டுமல்லாமல், அவரது கணவர் பாலாஜி மற்றும் அவரது நண்பர் புருஷோத்தமன் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மூவர்மீதும் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது, பண பரிவர்த்தனை விவரங்கள், நகைகள் தொடர்பான ஆதாரங்கள், செல்போன் அழைப்புகள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வெளியானதிலிருந்து, தமிழ் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ரசிகர்கள், “திரையில் வில்லியாக நடித்தவர், நிஜ வாழ்க்கையில் இப்படியான குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் திரையுலக வட்டாரங்களில், நடிகை ராணி தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. சிலர், அவர் மாநிலத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும், சிலர், வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் பேசுகின்றனர். ஆனால், இதுகுறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. மொத்தத்தில், குழந்தை நட்சத்திரமாக இருந்து, சின்னத்திரையில் வில்லி வேடங்களில் புகழ் பெற்ற நடிகை ராணி, தற்போது ஒரு மோசடி வழக்கில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவது, அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    actress rani

    காவல் துறை விசாரணை எந்த திசையில் செல்லும், நடிகை ராணி எப்போது பிடிபடுவார், குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது பொய்யா என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள், வரும் நாட்களில் வெளியாகும் விசாரணை முடிவுகளின் மூலம் தான் தெரியவரும் என்பதால், இந்த வழக்கு மீது தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: மூச்சுவிடவே சிரமப்படும் இயக்குநர் பாரதிராஜா..! பீதியில் ரசிகர்கள்.. கூலாக சொல்லி சென்ற மருத்துவர்கள்..!

    மேலும் படிங்க
    “வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்!”  வல்லுநர்களுடன் பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை! 

    “வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்!”  வல்லுநர்களுடன் பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை! 

    இந்தியா
    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    தமிழ்நாடு
    “கோவிந்தா, கோவிந்தா...!” - ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; பக்திப் பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!  

    “கோவிந்தா, கோவிந்தா...!” - ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; பக்திப் பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!  

    தமிழ்நாடு
    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    இந்தியா
    முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா..! தற்கொலை செய்துகொள்ள சென்ற ரோகிணி.. பரபரப்பாக மாறிய

    முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா..! தற்கொலை செய்துகொள்ள சென்ற ரோகிணி.. பரபரப்பாக மாறிய 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா

    செய்திகள்

    “வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்!”  வல்லுநர்களுடன் பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை! 

    “வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்!”  வல்லுநர்களுடன் பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை! 

    இந்தியா
    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    தமிழ்நாடு
    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    இந்தியா
    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share