நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் என போதைக்கு துணையாக உள்ள அனைவரையும் கைது செய்து வருகின்றனர். சமீப காலமாக குற்றசம்பவங்கள் அதிகம் கவனம் பெற துவங்கி உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கஞ்சா பயிறிடுவதை தடுக்கவும் போலீசார் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கஞ்சா ஆப்ரேஷன் 1.0 வில் ஆரம்பித்து கஞ்சா ஆப்ரேஷன் 2.0, கஞ்சா ஆப்ரேஷன் 3.0, கஞ்சா ஆப்ரேஷன் 4.0 என அது நீண்டது. இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சுத்துப்போட்ட என்ஐஏ... மும்பையில் 2 ஸ்லீப்பர் செல்கள் அதிரடி கைது..!
இதனை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலும் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டது. அதே சமயம் வட மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ரயில்கள் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும், விமானங்கள் வழியாகவும் கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை நடத்தியதில், 3 பெண்கள் தங்களது உடமைகளில் ரூ.8.6 கோடி மதிப்புள்ள உயர் தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பெண்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கூட்டாளிகள் யார்? எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டது? இதற்கு யார் யார் எல்லாம் உடந்தை என்பது குறித்து 3 பெண்களிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சுத்துப்போட்ட என்ஐஏ... மும்பையில் 2 ஸ்லீப்பர் செல்கள் அதிரடி கைது..!