தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து பழமைவாத ஜனநாயக மையம் கட்சியைச் சேர்ந்த 39 வயதான மிகுயல் உரிப் (Miguel Uribe) அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறார். நேற்று தலைநகர் போகோட்டில் (Bogot) பூங்கா ஒன்றில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவரை நோக்கி 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தலையிலும், மார்பிலும் குண்டு காயங்களால் உரிப் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மிகுவலின் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது, கொலம்பியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிப்பின் தந்தை தொழில் அதிபர். தாய் டயானா ஒரு பத்திரிகையாளர். 1990களில் ஆயுதம் ஏந்தி குழு ஒன்றால் அவர் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடந்த முயற்சியின் போது, டயானா கொல்லப்பட்டார். உரிப்பை கொலை செய்வதற்காக நடந்த முயற்சிக்கு கொலம்பியா நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.
"உரிபேயின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது பேரிழப்புதான். இந்த வலியை எப்படி கடந்து போவீர்கள் என்று தெரியவில்லை. உரிபேயின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதலாக இருப்போம்" என்று கூறியுள்ளார். இப்போது வரை உரிபேயின் உடல்நிலை குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இது குறித்து பொகோட்டா மேயர் கார்லோஸ் கலான் கூறுகையில், "பொகோட்டாவின் ஃபோன்டிபோன் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அவரை உடனடியாக நாங்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்திருக்கிறோம். விரைவில் அவர் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!