காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலக்கு பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இரவோடு இரவாக போர் விமானங்களை அனுப்பி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவு அடி விழுந்தது. 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த ஆப்ரேஷனில் ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் நடவடிக்கையை தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான், இந்தியாவின் ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு விழ்த்தியதாக பாகிஸ்தான் அளந்து விட்டது.

பாகிஸ்தான் பார்லிமென்ட்டிலேயே இப்படியொரு பச்சை பொய்யை அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறினார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் பாகிஸ்தான் காட்டவில்லை. இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். டிவி ஆங்கருக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியாவின் அடாவடி தனத்துக்கு தக்க பதிலடி கொடுத்தோம். ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என்றார்.
இதையும் படிங்க: உளறிக் கொட்டிய கவாஜா.. ஐ.நா சபையில் வச்சு செஞ்ச இந்தியா.. அனல் பறக்கும் பேச்சு..!

உடனே குறுக்கிட்ட ஆங்கர், கொஞ்சம் இருங்க. முதல்ல இந்த போர் விமானம் விவகாரத்தை முடிச்சிட்டு, அடுத்த கேள்விக்கு போலாம். இந்தியாவோட 5 போர் விமானங்கள சுட்டு வீழ்த்திட்டோம்னு பாகிஸ்தான் சொல்லுது. ஆனால் அப்படிலாம் ஒண்ணும் நடக்கல. இதுக்கு எந்த ஆதாரமும் இலலனு இந்தியா சொல்லுது. ரபேல் உட்பட 5 போர் விமானங்கள சுட்டது உண்மைனா, இப்போவே எவிடன்ச காட்டுங்க பார்க்கலாம் என்று ஆங்கர் கேட்டார்.

இதற்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் சொன்னது தான் ஹைலைட். ஆதாரம் எல்லாமே சோசியல் மீடியால தான் இருக்குது. அதுவும் எங்க சோசியல் மீடியா இல்ல. இந்தியாவோட சோசியல் மீடியால. நாங்க தாக்கியதும் போர் விமானங்களோட பாகங்கள் நொறுங்கி விழுந்துச்சு. அது இந்தியாவோட சோசியல் மீடியால தான் பரவி வருதுனு சிறு பிள்ளைத்தனமாக சொன்னார் கவாஜா ஆசிப். ஒரு நாட்டின் ராணுவ அமைச்சராக இருப்பவர் இப்படி சோசியல் மீடியாவில் ஆதாரம் இருக்கிறது என்று சொன்னதை கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போனார் டிவி ஆங்கர்.

உடனே ராணுவ அமைச்சருக்கு அவர் பாடம் எடுத்தார். சாரி சார், சோசியல் மீடியா கன்டன்ட் பற்றி பேச உங்கள நாங்க இங்க அழைக்கல. நீங்க தான் பாகிஸ்தானோட ராணுவ அமைச்சர். அதனால தான் உங்க கிட்ட கேட்கிறேன். எவிடன்ஸ் எங்க சார். சோசியல் மீடியா கன்டன்ட் பத்திலாம் இங்க பேச கூடாது என்று சொன்னார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சருக்கு டிவி ஆங்கர் இப்படி பாடம் எடுத்த விவகாரம் ட்ரெண்டிங் ஆகி விட்டது. இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை முடித்ததும் முழு ஆதாரங்களையும் காட்டியது. எப்படி தகர்த்தோம் என்பதற்கான வீடியோவையும் வெளியிட்டது.

உண்மை என்றால் ஆதாரம் காட்டலாம். அளந்து விட்டால் எப்படி காட்ட முடியும் என்று பாகிஸ்தானை கேலி செய்கின்றனர். அதே பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் சொன்னார். இந்த முறை சண்டை சீக்கிரத்தில் முடியாது. இது மிகப்பெரிய அளவில் தீவிரமாக நடக்கும். நீண்ட போராக கூட மாறும் என்றும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷபாஸ் ஒரு கோழை..! மோடி பேர சொல்ல கூட தகுதி இல்லை..! பாக். பார்லிமெண்டில் எம்.பி ஆவேசம்..!