சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான உட்கட்சி மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ராமதாஸ் தரப்பில் உள்ள கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கடந்த சில வாரங்களாக அன்புமணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது தொடர்பாக பாமக நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: “இனி அன்புமணியுடன் இணைந்து செயல்படுவதில்லை என்ற முடிவுக்கு ஜி.கே. மணி வந்துவிட்டார். அதனால், ராமதாஸை திமுக கூட்டணியில் சேர வைத்து, தானே எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கணக்கை போட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் ராமதாஸுக்கு இடம் கிடைக்காவிட்டால், நேரடியாக திமுகவில் சேர்ந்து எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற எண்ணத்திலும் ஜி.கே. மணி உள்ளார். அதனால்தான் அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அன்புமணியின் சூழ்ச்சி! மனவேதனையில் ராமதாஸ்!! ஜி.கே. மணி கட் அண்ட் ரைட் பேச்சு!

பாமகவில் நீண்டகாலமாக நிலவும் இந்த உட்கட்சி பிளவு தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ராமதாஸ் தரப்பு அன்புமணியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அன்புமணி தரப்பு அதை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் கட்சி இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் நிலை உருவாகியுள்ளது.
ஜி.கே. மணியின் தொடர் விமர்சனங்கள் ராமதாஸ் தரப்பை வலுப்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால், அவர் திமுக கூட்டணி அல்லது திமுகவில் இணைந்து எம்எல்ஏ ஆக விரும்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கட்சிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த உட்கட்சி மோதல் பாமகவின் வலிமையை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.
பாமகவின் எதிர்காலம் மற்றும் கூட்டணி தொடர்பான முடிவுகள் இந்த மோதலால் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஒற்றுமைக்கான முயற்சிகள் தோல்வியடைந்து வரும் நிலையில், இது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: “அது எப்ப நடக்குன்னு தான் நானும் காத்துக்கிட்டு இருக்கேன்”... ராமதாஸுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த வழக்கறிஞர் பாலு...!