ரஷ்ய நிபுணர்கள் பணிபுரியும் ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான கூட்டு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக புஷேர் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் இராணுவ ரீதியாக ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கையை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் செர்னோபில் போன்ற பேரழிவு ஏற்படும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனத் தலைவர் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அது கணிக்க முடியாத மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: "ம்"- னா சிறைவாசம்! ஏன்- னா வனவாசம்.. விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க! கொந்தளித்த விஜய்!!

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, “இந்த சூழ்நிலையில் இராணுவத் தலையீட்டிற்கு எதிராக வாஷிங்டனை நாங்கள் குறிப்பாக எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச சட்டத்தின் பார்வையில் சட்டவிரோதமானது.. இதனால் அணுக்கசிவு ஏற்படும்.. இதன் காரணமாக உலகம் முழுக்க அணு ஆயுத பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கும். இஸ்ரேல் உட்பட உலகம் முழுவதும் இதன் விளைவுகள் எதிரொலிக்கும். இது அணு ஆயுத பேரழிவை நோக்கி தள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்.. இல்லையென்றால் நிலைமை மோசமாகும். அணு கசிவு ஏற்பட்டால் அதை தடுக்க முடியாது. வளைகுடா நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அலர்ட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை உயராது.. கட்டுக்குள் தான் இருக்கு.. மத்திய அமைச்சர் சொன்ன ஆறுதல் வார்த்தை..!