பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அதன் படி, சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்று, அங்குள்ள அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததுடன், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்த கொலம்பியாவின் செயல் இந்தியாவுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதையும் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இப்படி பண்ணலாமா? சசி தரூர் செயலுக்கு வலுக்கு எதிர்ப்பு.. ஆதரவுக்கரம் நீட்டும் பாஜக..!

இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பகிர்வு குறித்த ஒப்பந்தம் 1960 முதல் அமலுக்கு வந்தது. நட்பு ரீதியில், நன்னம்பிக்கை மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இரு நாடுகளும் நதி நீரை பகிர்ந்து வந்தன. ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அந்த நன்னம்பிக்கையை உடைக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது. எங்கள் மீது தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை ஏவி விட்டு, பயங்ரவாதிகளை ஆதரிக்கின்றனர்.

அப்படியிருந்தும் நாங்கள் நல்லெண்ண அடிப்படையிலான செயலை முறித்துக்கொள்ளாமல் இருந்தாேம். ஆனால் அதை இனியும் பொறுக்க முடியாது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இனி பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை கைவிட்டு, அதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வரை சிந்து நதி விவகாரதம் குறித்து மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை.

பயங்ரவாதிகளை ஆதரப்பதுடன், அவர்களை தியாகிகள் போல் சித்தரிக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து, அவர்களுக்கு பணம் வழங்கி, அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். இப்படியிருக்கையில், பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதில், பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் பலிக்கு அனுதாபம் தெரிவித்த கொலம்பியாவின் செயலில் எங்களுக்கு வருத்தமே.

பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள். அவர்கள் பொதுமக்கள் அல்ல. அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் என சசி தரூர் பேசினார்.
இதையும் படிங்க: இரட்டை வேடம் போடும் பாக்., பயங்கரவாதத்தை ஒழிக்க இத்தாலிக்கு இந்தியா அழைப்பு..!